மனம் நெகிழ வைக்கும் குட்டிக் கவிதைகள்

Image

ம்மா…

அம்மா என்றால்

ஒரு அம்மாதான்.

உன் அம்மா… என் அம்மா

தனித்தனி அம்மாக்கள்

கிடையாது.

  • லா.ச.ரா.

மாற்றம்

புழுவாகச்

சம்மதித்தால்

வண்ணத்துப்பூச்சி

ஆகலாம்.

  • கோ.வசந்தகுமாரன்

தேடு

இலை மறைவுக் கனி தெரிகிற

வண்டுக்குத் தெரியவில்லை

பக்கத்தில் மறைந்திருக்கும்

 பச்சோந்தி.

  • பிருந்தா சாரதி

காத்து

எழுபத்தாறு வருடங்களாக

உள்ளேயும் வெளியேயும்

போய்வருகிறது காற்று.

கொஞ்சம் கூடப்

புரிந்துகொள்ள முடியவில்லை

நாசி நரைமயிரை அசைத்தாடும்

என் மூச்சை.

  • கல்யாண்ஜி

Leave a Comment