சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
பயணம்
இருப்பதைத் தொலைப்பதும்,
தொலைப்பதை தேடுவதுமாய்,
இவ்வாழ்தல்
ஓரு சுவாரஸ்யமான
நெடும் பயணம்.
- பாமதி
வாழ்வு
உலகம்
என்னிடமிருந்து தொடங்கவில்லை.
அது என்னோடு
முடிவடையப் போவதுமில்லை.
துள்ளிப் போகும் ஆற்றில்
ஒரு துடிப்பு
நான்.
- ஆக்டேவியா பாஸ்
முடிவு
எது மரம்?
எது மனிதன்?
புதிராக்கி விடுகிறது
சுடுகாட்டு சாம்பல்…!!
- ஐ.தர்மசிங்