நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்

Image

கவித்துவம்

சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்

நீ

எல்லாமே இருக்கிறது;

நீ இல்லாமல் போய்விடாதே.

    – ராஜா சந்திரசேகர்

கடவுள்

குவித்தும் அடுக்கியும்

வைத்திருக்கும்

நொங்குகளை

பத்து ரூபாய்க்கு மூன்று

என விற்பவன்,

வயோதிகரான அவருக்கு

ஐந்தெனக்கொடுக்கும் தருணத்தில்,

மனதுக்குள்

புன்னகைத்துக்கொள்கிறது

வெயில்….!!!

  • கூடல் தாரிக்

வேடிக்கை

சென்று பார்க்க

ஒரு கடலும்

நின்று பார்க்க

ஒரு மழையும் போதும்

என் அத்தனை துயருக்கும்…!!

– மனோகுட்டி

பிரிவு

மறந்து விடுவதும்

ஒருவகை விடுதலை

நினைவு கூர்தலும்

ஒருவகை சந்திப்பு

  • கலீல் ஜிப்ரான்

Leave a Comment