கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
நீ
எல்லாமே இருக்கிறது;
நீ இல்லாமல் போய்விடாதே.
– ராஜா சந்திரசேகர்
கடவுள்
குவித்தும் அடுக்கியும்
வைத்திருக்கும்
நொங்குகளை
பத்து ரூபாய்க்கு மூன்று
என விற்பவன்,
வயோதிகரான அவருக்கு
ஐந்தெனக்கொடுக்கும் தருணத்தில்,
மனதுக்குள்
புன்னகைத்துக்கொள்கிறது
வெயில்….!!!
- கூடல் தாரிக்
வேடிக்கை
சென்று பார்க்க
ஒரு கடலும்
நின்று பார்க்க
ஒரு மழையும் போதும்
என் அத்தனை துயருக்கும்…!!
– மனோகுட்டி
பிரிவு
மறந்து விடுவதும்
ஒருவகை விடுதலை
நினைவு கூர்தலும்
ஒருவகை சந்திப்பு
- கலீல் ஜிப்ரான்