கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
புரிதல்
எப்படி நான்
அறியப்பட்டிருக்கிறேன்
என்பதில் இல்லை நான்.
– வித்யாஷங்கர்
பசி
எனக்கிருக்கும்
வருத்தங்களுக்கு எல்லாம்
இந்தப் பசி மட்டும் இல்லாவிட்டால்
வாழ்நாள் முழுக்க சாப்பிடாமல்
வீம்பாக இருந்துவிடுவேன்.
பசிக்கிறது
பசி என்பது சமரசம்
சமரசம் எனது பசி
- மனுஷ்ய புத்திரன்
மாற்றம்
பகலில் எரியும்
திரியில் இருந்து
சுருள் சுருளாக பிரிகிறது இருள்
- கிருபா