என்ன செய்தார் சைதை துரைசாமி – 307
முன்னேறிய மேலை நாடுகளில் எல்லாம் குப்பை மேலாண்மை முழுக்க முழுக்க நவீனத்துவமாக மாறிவிட்டது. அந்த வகையில் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களில் பல்வேறு நவீனங்களைப் புகுத்தினார் மேயர் சைதை துரைசாமி. அதோடு மக்கள் கண்ணுக்குத் தெரியாமல் குப்பைகளை பங்கர் முறையில் பூமிக்கு அடியில் சேகரித்து மின்சாரமாக, உரமாக மாற்றுவதற்கு என்று கனவு கண்டார்.
இந்த நேரத்தில் குப்பை வளாகத்தில் அவசரமாக செய்துதர வேண்டிய பணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இரவு நேரங்களில் மின்சார விளக்குகள் இல்லாமல், லாரிகள் உள்ளே சென்று வருவதற்கு சிரமம் எடுத்துக்கொள்வதைக் கண்டார். உடனடியாக குப்பை வளாகம் முழுக்க விளக்குகள் போடப்பட்டன. அதோடு குப்பை வளாகத்தில் அவ்வப்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கு மேயர் சைதை துரைசாமி உத்தரவு போட்டார். இதனால் துர்வாடை, அசுத்தம் போன்றவை குறைந்தன.
மேயர் சைதை துரைசாமி பசுமை ஆர்வலர். சென்னை நகரை பசுமைப் போர்வையாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். எல்லா இடங்களிலும் மரம் வளர்ப்பதற்கு ஊக்கம் கொடுப்பவர். அந்த வகையில் குப்பை வளாகத்திலும் பசுமையைக் கொண்டுவர ஆசைப்பட்டார். அதேநேரம், அதில் புதுமையைக் கொண்டுவந்தார்.
குப்பை வளாகத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்கும் வகையில் பல்வேறு மூலிகை செடிகள் வளர்ப்பதற்கு மேயர் சைதை துரைசாமி ஆலோசனை கொடுத்தார். குறிப்பாக ஆமணக்கு, பரங்கி மற்றும் தானியச் செடிகளைக் கொண்டு குப்பை வளாகத்தைச் சுற்றி பசுமை வேலி அமைப்பதற்குத் திட்டம் தீட்டினார். இதனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு செடி, கொடிகள் மட்டுமே கண்ணுக்குத் தென்படும். துர்நாற்றம் மற்றும் அசுத்தம் வெளியேறாமல் தடுக்கும் அரணாக பசுமை வேலி செயல்படும் என்று உறுதியாக நம்பினார். இப்படி, எடுத்துக்கொண்ட எல்லா செயல்களிலும் மேயர் சைதை துரைசாமி புதுமைகளைப் புகுத்தி பாராட்டு பெற்றார்.
- நாளை பார்க்கலாம்