ஜோக் கேட்டு சிரிங்கப்பூ
நீதிபதி : உன் பேர் சொல்லு, எதுக்காக உன் உயிர் நண்பனை கொலை செஞ்சே, எதை வைச்சு கொலை செஞ்ச, உனக்கு மனசாட்சி இல்லையா?
கைதி : இப்படித்தான் கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தான் எஜமான்.
…………………..
நீதிபதி : ஒரே ராத்திரியில மூணு வீட்ல கொள்ளை அடிச்சிருக்கே. எப்படி அது உன்னால முடிஞ்சது..?
கைதி : தொழில் ரகசியம் எல்லாம் வெளியே சொல்ல மாட்டேங்க.
…………………………
அவர் : நேத்து ராத்திரி பயங்கரமா திட்டிக்கிட்டே இருந்தீங்களே… யாரை..?
இவர் : என் பொண்டாட்டியைத்தான்.
அவர் : அவங்கதான் ஊருக்குப் போயிட்டாங்களே..
இவர் : இந்த நேரத்துலதான சார் திட்ட முடியும்.
………………….
அம்மா : மகனே, அப்பாவுக்கு ஒரு பொண்ணு பிடிச்சிருக்காம், அவளைத்தான் நீ கல்யாணம் செய்யணும் சரியா..?
மகன் : அடப்போம்மா, அவருக்கு நம்ம வேலைக்காரியைத்தான் ரொம்பவும் பிடிக்கும். நான் மாட்டேம்மா.
……………………………
மாமியார் : என் மருமக ரொம்பவும் ஃபாஸ்ட்..
இவள் : அப்படியா..?
மாமியார் : பின்னே, எனக்கு உடம்பு சரியில்லைன்னுதான் சொன்னேன், உடனே இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செஞ்சிட்டா
……………………………..