தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்குமா?
ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக கிட்டத்தட்ட அத்தனை தென் மாநிலங்களும் ஒன்றாக நின்றாலும் எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால் எம்.பி.க்கள் எண்ணிக்கையில் வட மாநிலங்களே மெஜாரிட்டியாக இருக்கின்றன. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இப்போதே முதல்வர் ஸ்டாலின் குரல் எழுப்பியிருக்கிறார். இது ஏன் என்று பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மூன்று முறை அதாவது 1951, 1961 மற்றும் 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. அதன்படி 1951ம் ஆண்டு 494 தொகுதிகள் என்றும் 1961ம் ஆண்டு 522 என்றும் 1971ம் ஆண்டு 543 எனவும் மாற்றி அமைக்கப்பட்டன.
இதன்பின் 2001ல் மறுவரையறைக்கு திட்டமிடப்பட்டது. ஆனால், சமச்சீரற்ற மக்கள் தொகையை சுட்டிக்காட்டி தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் தொகுதி சீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பின் போது, தற்போது உள்ளது போலவே 10 லட்ச மக்கள் தொகைக்கு ஒரு தொகுதி என கணக்கிடப்படும் என தெரியவருகிறது.
அதன்ப்டி உத்தரப்பிரதேசத்தின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்கு உயரும். ஏனென்றால், இந்த மாநிலம் குடும்பக் கட்டுப்பாடு போன்ற எந்த நலத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்பதால் அதிக மக்கள் தொகையுடன் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் மக்கள் தொகை அதிகமாக உயரவில்லை. எனவே, தமிழ்நாட்டில் எண்ணிக்கை 39ல் இருந்து 76 ஆக உயர வாய்ப்பு உண்டு. அதேநேரம், பீகார், ஜார்க்கண்ட் ஆகியவற்றின் எண்ணிக்கை 25ல் இருந்து 82 ஆக உயரும்.
இப்படி சமச்சீரற்ற முறையில் தொகுதி பிரிக்கப்படுவது தமிழகத்துக்கு அநீதியாகவே அமையும்.
ஆகவே, அமெரிக்க செனட் போன்று சமமான உரிமைகள் தேவை என்று தி.மு.க. குரல் கொடுக்கிறது. அதாவது, மாநிலங்கள் சின்னதோ பெரியதோ … அனைத்து மாநிலங்கள் .. மக்களவையில் சமமான இடங்கள் இருக்க வேண்டும். அதேநேரம், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை .. உள்ளாட்சி அமைப்புகள் எண்ணிக்கை ஜனத்தொகை அடிப்படையில் அமையலாம்.
ஏன் என்றால் இவை இரண்டும் மக்களுக்கு அருகில் சேவை புரியும் அரசியல் தன்மை உடையது… ஆனால் மக்களவை பிரதிநிதிகள் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களுக்கு சமமாக இருக்க வேண்டும். மணிப்பூர் எண்ணிக்கை காஷ்மீர் எண்ணிக்கை தமிழ் நாட்டு எண்ணிக்கை உத்திர பிரதேசம் எண்ணிக்கை ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த நாட்டிற்கு மொழி வாரி மாநிலங்கள் சமமாக பார்க்க படுவார்கள்.
நம் தமிழ் நாட்டின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் – 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கலாம்… உத்திர பிரதேசம் 1 நாடாளுமன்ற உறுப்பினருக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இருக்கலாம்… ஆனால் பாராளுமன்ற எண்ணிக்கையில் தமிழ் நாடும்… உத்திர பிரதேசம் ஓரே எண்ணிக்கை தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.