நடைமுறைக்கு வந்த குப்பை திட்டங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 326

குப்பை மேலாண்மையில் முக்கியமான விஷயம், அவற்றின் அளவைக் குறைப்பது என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் தெளிவாக இருந்தார். அதிக அளவு குப்பைகள் கிடங்கிற்குப் போகாத வகையில் தடுத்து நிறுத்திவிட்டால் நிர்வாகம் செய்வது எளிது என்று முடிவெடுத்தார்.

எனவே, அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் நிபுணர்கள்,  தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய வல்லுனர் குழுவினர் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் திட்ட அறிக்கை  தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது.

அதேநேரம், குப்பையில் இருந்து பயோகேஸ், இயற்கை உரம் தயாரிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. மின்சாரம், பயோகேஸ், உரம் என்று பல்வேறு வகையில் குப்பையின் அளவு குறையும்போது, மீதமிருக்கும்  குறைந்தபட்ச கழிவுகள் மட்டுமே குப்பை வளாகத்தில் சேர்க்கப்படும்.  எனவே, விஞ்ஞான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பையின் அளவைக் குறைக்கும் பணியில் மேயர் சைதை துரைசாமி தீவிரமாக இறங்கினார்.

மக்கும் குப்பையிலிருந்து  எரிவாயு,  மின்சாரம், உரம்  உற்பத்தி செய்வதற்கான சிறிய நிலையங்கள் மாநகர சென்னையின் பல்வேறு இடங்களில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைத்து திட்டங்களையும் ஏட்டளவில் மட்டுமின்றி நடைமுறைக்கும் கொண்டுவந்து காட்டினார் மேயர் சைதை துரைசாமி.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் தொழில்நுட்ப உதவியோடு, புளியந்தோப்பில் குப்பையில் இருந்து எரிவாயு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிலகம் செயலுக்கு வந்தது. ஓட்டேரி மற்றும் வேலங்காடு இடுகாடு வளாகத்தில்  தினமும் தலா  3 மெட்ரிக்டன் குப்பையிலிருந்து மின்சார உற்பத்தி   தொடங்கப்பட்டது. அதேபோல், அத்திபட்டு குப்பை வளாகத்தில் இருந்தும்  தினசரி 3 மெட்ரிக்டன் குப்பையிலிருந்து மின்சாரம்  எடுப்பதற்குப் பணிகளும் தொடங்கப்பட்டன. இவை எல்லாமே மேயர் சைதை துரைசாமியின் தெளிவான திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment