சிரித்து சிரித்து மகிழுங்கள்

Image

ஒருத்தி : முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வரும்போதே நான் கண்டிச்சிருக்கணும்….

மற்றவள்: ஏன், என்னாச்சு…?

ஒருத்தி :  ரிசப்ஷன் பொண்ணைக் கொண்டு வந்துட்டாருடி..

……………….

ஆபிசர் : யோவ், பிச்சை கேட்க ஆபீசிற்கா வருவது?

பிச்சைக்காரர் : வீட்டுலதான் கேட்டேங்க. ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே…

………………..

பேராசிரியர் : காலேஜுக்கு ஏன்டா லேட்டு?’’

மாணவர் : பைக் பஞ்சர் சார்!’’

பேராசிரியர் : சரி, பஸ்ல வர்றது…?’’

மாணவர் : அய்யோ, பஸ் வாங்குற அளவுக்கு எனக்கு வசதி இல்லை சார்!

………………..

அவன் : வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது.

இவன் : இது பரவாயில்லையே ! என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்க மாட்டேங்குது..

………………

அவன் : ஏண்டா மச்சான் சோகமா இருக்க?’’

இவன் : இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்!’’

அவன் : என்னடா ஆச்சு?’’

இவன் : என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிட்டு,  ஞாபக மறதில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!

……………………………

சாப்பிட வந்தவர்:  என்னய்யா சாம்பார்ல புதுசா பிளேடு கிடக்குது….?

சர்வர் : தாங்ஸ் சார். ஒரு வாரமா இதை தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன் சார்

Leave a Comment