மேயர்கள் மாநாட்டில் நிதியுதவி ஆலோசனை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 346

பெருநகர சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து மேயர் சைதை துரைசாமி, ஒவ்வொரு நாளும் ஏதேனும் வகையில் சென்னையை மேம்படுத்துவதற்கு உழைத்துக்கொண்டே இருந்தார். சென்னை மாநகராட்சியில் அதிகமான நேரம் செலவிட்ட ஒரே மேயர் சைதை துரைசாமி மட்டும்தான்.

சிங்கப்பூரில் உலகின் முக்கிய நகரங்களைச் சேர்ந்த மேயர்களின் மாநாடு என்றதும் அதனை சென்னையின் வளர்ச்சிக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் மேயர் சைதை துரைசாமி. அதனாலே, தன்னுடைய சொந்த செலவில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார்.

சிங்கப்பூரில் 2012, ஜூலை 1 அன்று மேயர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு உலகெங்கும் இருந்து சுமார் 105 நகரங்களின் மேயர்கள், துணை மேயர்கள், ஆளுநர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் மூலம் சென்னையின் புகழையும் பெருமையையும் மற்ற நாட்டினருக்கு எடுத்துரைத்தார்.

இந்த மாநாட்டைத் தொடர்ந்து ‘ஒருங்கிணைந்த நகரமைப்புத் திட்டம் மற்றும் வளர்ச்சி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆர்வமுடன் கலந்துகொண்டார். இந்த கருத்தரங்களில் கலந்துகொண்ட நேரத்தில் மேயர் சைதை துரைசாமிக்கு ஒரு முக்கியமான தகவல் தெரியவந்தது. அதாவது ரோடு, பாலம் கட்டுவது போன்ற பணிகளுக்கு மட்டுமின்றி ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கும் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் நிதியுதவி செய்கிறது என்பது தெரியவந்தது.

உடனே மேயர் சைதை துரைசாமி, தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் இருக்கும் ஆறுகளை சுத்தம் செய்வதற்கு உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உதவி செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ‘புதுடெல்லியில் இயங்கிவரும் உலக வங்கி அலுவலகத்தில் இதுகுறித்த வழிகாட்டுதலுக்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்று உறுதி கொடுத்தனர்.

இந்த தகவல் மேயர் சைதை துரைசாமிக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment