ஜோக்ஸ்
மனைவி: “என்னங்க, நான் சிரிக்கும்போது என் கன்னத்தில் விழுற குழியைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?”
கணவர்: “அவசரப்பட்டு படுகுழியில் விழுந்திட்டேனோன்னு தோணுது”.
————-
பேரன் : “தாத்தா… குளிர்காற்று அதிகமாக வீசுகிறது. காதில் பஞ்சை வைத்துக்கொள்!”
தாத்தா: “வைக்கலைனா?”
பேரன்: “வைக்கலைனா, உங்க மூக்குல பஞ்சை வைக்க வேண்டிருக்கும்”.
————
ஆசிரியர்: “அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு?”
மாணவன்: “முதல்ல தொலைச்சது யாரு, சொல்லுங்க சார்?”
————–
தொலைபேசியில்….
“மேடம், என் மகன் ராமுவிற்கு காய்ச்சல், இன்னைக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்”.
“நீங்க யார் பேசுறது?”
“நானா… எங்கப்பா ராஜாராம் பேசறேன்”.
————–
போலீஸ்: “பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?”
டிரைவர்: “அதான் எனக்கும் புரியல சார். நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்”.