ஏழை மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 85

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சித்த மருந்துகள் அறிமுகப்படுத்தியதும் தன்னுடைய கடமை முடிந்துவிட்டது என்று மேயர் சைதை துரைசாமி அமைதியாக இருக்கவில்லை. மலேரியா, டெங்கு போன்ற நோய்களை உருவாக்கும் கொசுக்களை சென்னையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

கொசுக்களை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதான பணியல்ல என்பது சைதை துரைசாமிக்கு நன்றாகவே தெரியும். எனவே, முதல் கட்டமாக கொசுக்களிடம் இருந்து ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டார்.

பணக்காரர்கள் தங்கள் வீட்டைச் சுற்றி கொசுவலை அடித்துக்கொள்கிறார்கள். இதனால் கொசுக்கள் இல்லங்களில் நுழைவது தடுக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் வீடு முழுவதும் கொசுவலை அடிக்க முடியவில்லை என்றாலும் கொசு விரட்டி வாங்கிக்கொள்கிறார்கள். கொசுவைக் கொல்லும் மின்சார மட்டை,  கொசுவை விரட்டும் களிம்பு, கொசுவிரட்டித் தைலம், கொசுவிரட்டிச் சுருள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் கொசுவை விரட்டுவதற்கு ஒவ்வொரு மாதமும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஏழை, எளிய மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கொசுவிரட்டிச் சுருள் வாங்குவதற்கும் யோசனை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். கொசு விரட்டி சுருள் அதிக நேரம் தாக்குப்பிடிப்பதில்லை என்பதுடன் அதனால் உடல்நலக் குறையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் இருக்கும் விளிம்பு நிலை மக்களே பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலும், குடிசை வீடுகளிலும், ரோட்டோரமும் வசிக்கிறார்கள்.

இப்படி கடுமையான சூழலில் வாழ்க்கையை நகர்த்தும் விளிம்புநிலை மனிதர்களை கொசுவிடம் இருந்து காப்பாற்றுவது முதல் கடமை என்று நினைத்தார் மேயர் சைதை துரைசாமி. இவர்களுக்கு கொசுவலை கொடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment