மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசக் கையேடு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 162

மேயர் சைதை துரைசாமியின் தொலைநோக்குப் பார்வை, தெளிவான திட்டமிடல், கடுமையான உழைப்பு, மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர் ஒருங்கிணைப்பு போன்ற காரணங்களால் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி வெற்றி விகிதம் மளமளவென உயர்ந்தன. அதோடு தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு அதிக மதிப்பெண் வாங்கும் சாதனைகளும் மாநகராட்சிப் பள்ளிகளில் நடந்தன.

மாணவர்களின் பள்ளிப் படிப்புக்கு உதவுவதுடன் தன்னுடைய  கடமை முடிந்துவிட்டதாக மேயர் சைதை துரைசாமி திருப்தி அடையவில்லை. மாநகராட்சி மாணவர்களின் உயர் கல்விக்கும் எதிர்காலத்துக்கும் போதிய விழிப்புணர்வு கொடுப்பதற்கு விரும்பினார். இதையடுத்து மாணவர்களின் எதிர்காலப் படிப்புக்கு உதவும் வழிகாட்டும் இலவசக் கையேடு வழங்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் +2 வகுப்புக்குப் பிறகு என்னென்ன கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன, எங்கு படிக்கலாம், ஒவ்வொரு படிப்புகளுக்கும் எப்படிப்பட்ட பணி வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற தெளிவான குறிப்புகளுடன் கூடிய கையேட்டை சைதை துரைசாமி உருவாக்கி, அதனை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

தங்கள் எதிர்காலம் குறித்து தாங்களே சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பதற்கு இந்த கையேடு உதவும் என்ற நம்பிக்கையுடன் தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் இந்த கையேட்டை எளிமையாக உருவாக்கினார் மேயர் சைதை துரைசாமி. இந்த கையேட்டைப் பார்த்த அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்து, மேயர் சைதை துரைசாமியின் ஆக்கபூர்வமான சேவையைப் பாராட்டி வாழ்த்தினார். இந்த கையேடு பெற்றோர்களிடமும் மிகுந்த விழிப்புணர்வை உருவாக்கியது.

உயர் கல்விக்கு எத்தனை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்பதைக் கண்டு வியந்த அத்தனை பேரும் மேயர் சைதை துரைசாமியின் கல்வி சேவையை மனதாரப் பாராட்டினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment