என்ன செய்தார் சைதை துரைசாமி – 220
சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக, பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் மூலம் சாலைப் பணியில் அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைப்பதற்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட நடவடிக்கை பெருமளவு பாராட்டு பெற்றது. மழை நீர் வடிகால்வாய், குடிநீர், மின்சாரம், நடைபாதை, கேபிள் போன்ற அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து சாலை போடும் பணிகள் மேற்கொள்ளத் தொடங்கினால், புதிய ரோடு போடப்பட்டதும் தோண்டப்படும் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன.
அதோடு, சாலைப் பணி மேற்கொள்ளும்போதே, அதன் தரத்தை பரிசோதனை செய்துவிட வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி ஆலோசனை தெரிவித்தார். அதாவது, சாலைகள் போடப்பட்ட பிறகு, அதன் தரத்தை ஆய்வு செய்து, அதில் குறை இருப்பதை கண்டுபிடிப்பதை விட, சாலை போடும் நேரத்திலேயே கண்காணிப்பு செய்தால் தரமான சாலை பெறமுடியும் என்று கூறினார்.
மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையின் பேரில் திட்ட ஆலோசகர் மூலம் சாலையின் தரம் ஐந்து அடுக்குகளாகப் பரிசோதனை செய்யப்பட்டது.
- முதல் கட்டமாக ஒப்பந்ததாரரின் வெப்பத் தார் நிலையத்தில் திட்ட மேலாண்மை ஆலோசகர் பரிசோதனை நடத்துவார்.
- அடுத்து, சென்னை மாநகராட்சி தரக் கட்டுப்பாடு துறையின் மூலம் சாலைப் பணி நடைபெறும் இடத்தில் பரிசோதனை நடைபெறும்.
- சாலைப் பணி நடைபெறும் இடத்தில் திட்ட மேலாண்மை ஆலோசகர் பரிசோதனை நடைபெறும்.
- மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரடி ஆய்வு மற்றும் கலவைகளை எடுத்துச்சென்று பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்வார்கள்.
- தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் மாநில தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும்.
சாலைகள் தரமாக அமைய வேண்டும் என்பதற்காக மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட இந்த நடவடிக்கை ஒரு சீர்திருத்தப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.
- நாளை பார்க்கலாம்.