நதிக்கரை மக்களிடம் கைரேகை, குடும்பப்படம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 371

கூவம் நதியை சீரமைப்பு செய்வது வழக்கம்போன்ற ஒரு பணியாக மாறிவிடக் கூடாது என்பதாலே ஒவ்வொரு பணிகளும் மிகத் தெளிவாக திட்டமிடப்பட்டன. மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் வீணாகிவிடக் கூடாது என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் கவனமாக இருந்தார்.

அதனாலே கூவம் சீரமைப்புத் திட்டத்தில் மிக முக்கியமான பணிகள் எல்லாமே சென்னை பெருநகர மாநகராட்சி மேற்கொண்டது. ஒட்டுமொத்தமாக 24 பணிகளை மற்ற துணைகளுடன் இணைந்து சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என்று மேயர் சைதை துரைசாமி மாமன்றக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அந்த நேரத்திலேயே மாநகராட்சி எந்தெந்த துறையுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளும் என்பதையும் அறிவித்தார்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்துடனும், பொதுப்பணித் துறையுடனும் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கூவம் நதியின் இருபுறமும்ஆக்கிரமிப்பு செய்துள்ள குடிசைப் பகுதி மக்களின் கணக்கெடுப்பு பணி, குடியிருக்கும் நபர்களிடம் கை விரல் ரேகை மற்றும் குடும்ப புகைப்படம் எடுக்கும் பணியும் ஒதுக்கப்பட்டது.

நதிக்கரையில் வசிப்பவர்களின் கை ரேகை மற்றும் குடும்பப் படம் எடுப்பது அவசியம் என்று மேயர் சைதை துரைசாமியே வலியுறுத்தினார். எத்தனை குடும்பத்தினர், ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் என்ற கணக்கு மட்டுமின்றி அவர்களுடைய கை விரல் ரேகையும் பெற்றுவிட்டால் மாற்று இடம் கொடுக்கையில் எந்த பிரச்னையும் எழாது என்று கூறினார். ஏனென்றால் வீடு கிடைக்கும் நேரத்தில் சிலர் வேண்டுமென்றே உள்ளே புகுந்து குழப்பத்தை உருவாக்குவார்கள். அப்படியொரு நிலைமை உருவாகக்கூடாது என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார்.

மேலும், உண்மையிலே கூவம் நதிக்கரையில் வசிக்கும் நபர்கள் ஒருபோதும் விடுபட்டுவிடக் கூடாது என்பதிலும், உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் மாற்று வீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment