• Home
  • சக்சஸ்
  • நீங்கள் யார் என்று கண்டுபிடியுங்கள்..!

நீங்கள் யார் என்று கண்டுபிடியுங்கள்..!

Image

வெற்றிக்குக் குறுக்கு வழி

வெற்றி அடைவதற்கு நேர் வழியே சரியானது என்பார்கள். இது உண்மையாக இருந்தாலும் வெற்றியைத் தொடுவதற்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நபரும் அவருடைய தனித்தன்மை எது என்றும் அவரது பலவீனம் எது என்பதையும் அறிந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நேரத்தில் ஒரு உண்மை அனைவருக்கும் புரிய வேண்டும். அதாவது, எல்லா மனிதரும் ஒன்றல்ல. அதாவது உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டவர்கள். மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை.

அதனால் தான் ஒருவருக்குப் பிடிக்கும் உடை வேறு ஒருவருக்குப் பிடிப்பதில்லை. வெவ்வேறு விருப்பத்தில் மனிதர்கள் இருப்பதாலே ஐஸ் க்ரீம் கூட பல்வேறு ஃப்ளேவர்களில் உருவாக்கப்படுகிறது. ஒருவருக்குப் பிடித்த சினிமா வேறு ஒருவருக்குப் பிடிப்பதில்லை. இவற்றை ஏற்றுக்கொள்வது முக்கியம். நாம் விரும்பும் ஒரு விஷயம், அடுத்தவருக்கு வெறுப்பாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதேநேரம், ஒருவரின் தனித்தன்மை அடுத்தவரிடம் இருப்பதில்லை. தம்முடைய பலம் மற்றும் பலவீனத்தில் மனிதர்கள் வேறுபடுகின்றனர். இதை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும். ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க,  நம்முடைய திறமையை வெளிப்படுத்தவும், நமது திறமைக்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அது உதவும். நம்மிடம் உள்ள சிறப்பான திறனை, நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கென்று ஒரு செயலை செய்யும் ஸ்டைல் இருக்கும். அதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எந்த வேலையுடனும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள முடியும்.

நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறஅல்லது கடினமாக்குகிறது. செயல்முறையை பொறுத்தே ஒன்றை முன்கூட்டியோ, அல்லது தாமதமாகவோ செய்ய முடிகிறது. முதலில் உங்களுடைய மிக பெரிய பலம் எது என்று கண்டுபிடிங்கள். செயலாற்றும் திறமை, உயர் நுணுக்க அறிவு, ஆர்வங்கள் ஆகியவற்றில் உங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல், உங்களுடைய பண்பு நலன்கள், திறன்களை பட்டியலிடுங்கள். படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய பண்பு நலன்கள் எந்தளவுக்கு உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.

உங்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் விஷயம் எது என்பதை அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.

`முதலில் உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யுங்கள்! நீங்கள் கற்பனையாளரா..? அல்லது எதையும் அணுகி ஆராய்பவரா..? அல்லது எந்திரத்தனமானவரா..? என்பதை அறிந்து அதற்கான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இப்படி தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம். அது சுலபமாகவும் கிடைக்கும்.

Leave a Comment