விறுவிறுப்படைந்த சாலை பணிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 239

ஹாரிங்டன் சாலை போன்று சென்னை நகரம் முழுக்க அமைக்கத் திட்டமிட்ட மேயர் சைதை துரைசாமியின் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் எதிர்கால சென்னையை காங்கிரீட் சாலையாக வடிவமைக்கத் தீர்மானம் நிறைவேற்றினார்.

காங்கிரீட் சாலை அமைப்பில் புதிய யுக்தி ஒன்றும் கண்டறியப்பட்டது. அதாவது, காங்கிரிட் சாலை அமைக்கும்போது, பழைய தார்ச் சாலைகள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கும் தார்ச் சாலையில் இருந்து ஏராளமான தார்க் கழிவுகள் கிடைக்கும். வழக்கமாக இந்தத் தார்க் கழிவுகளை குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், சைதை துரைசாமியின் கொடுத்த ஆலோசனைப்படி அந்த தார்க் கழிவுகள் மறுசுழற்சி செய்வதற்குத் திட்டமிடப்பட்டது.

இந்த தார்க்கலவையை மறு சுழற்சி செய்யும்போது நிறைய நிதி மிச்சமாகும். எனவே, அகழ்ந்தெடுக்கும் தார்க் கலவைகளை, மத்திய வெப்ப தார் கலவை மையத்தில் சேமிக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து வடசென்னை மற்றும் தென் சென்னையில் வெப்ப தார் கலவை நிலையம் அமைக்கவும், அந்த இடத்தில் தார்க் கழிவுகளை சேகரிக்கவும் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது தார் ரோடு போடும் செலவும் பெருமளவு குறையும் என்பது நல்ல தகவல்.  

சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்புகளான சாலை அமைத்தல், மழைநீர் கால்வாய் அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், பெயர் பலகைகள் அமைத்தல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் கம்பி வடங்கள் செல்வதற்கு  குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகள் எல்லாம் போர்க்கால அடிப்படையில் நடந்தேறின.

  • இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1146.67 கி.மீ. நீளமுடைய சாலைகள் புனரமைக்கப்பட்டன.
  •  170.69 கி.மீ. நீளமுடைய மழைநீர் வடிகால்வாய்கள் செப்பனிடப்பட்டன.
  •  238.83 கி.மீ. நீளமுடைய நடைபாதை பணிகள் நடந்தேறின.
  • 1,74,784 எல்.இ.டி. தெரு விளக்குகள்  பயன்பாட்டிற்கு வந்தன.
  • 73,576.36 சதுர மீட்டர் சாலைகள் சீரமைக்கப்பட்டன.

இத்தனை பெரிய சீரமைப்பு மேயர் சைதை துரைசாமியின் காலத்தில் செய்து முடிக்கப்பட்டது ஒரு சாதனையாகவே இன்றும் கருதப்படுகிறது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment