பெண்ணுக்கு கண் அழகு!

Image

சூப்பர் பியூட்டி டிப்ஸ்

உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு. சோர்ந்து, களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும்.

கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம்.

* தினசரி எட்டு மணி நேரத் தூக்கம்.

* போஷாக்கான ஆகாரம்,  அதாவது கால்ஷியம், வைட்டமின்கள் நிறைந்த உணவு.

* பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.

* போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம்.

* உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரச் சுற்றின் படி நேராகவும் எதிர்ப்புறமாகவும் சுழற்ற வேண்டும்.

* அதே போன்று அருகில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளை பார்க்க வேண்டும்

* கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.

* நீண்ட நேரம் கம்ப்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

* கண்களுக்கு மேக்கப் போடும்போது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவிய பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும்.

* காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும்.

* இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் பேஷன். சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம்.

* பிறகு மஸ்காராவை காலை வேளைகளில் ஒரு கோட்டும், மாலை வேளைகளில் இரண்டு, மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன், நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன.

* கடைசியாக காஜல். அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

* கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும்.

* தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால், காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.

* பல பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது கருவளையம். இவை முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றன. கருவளையங்கள் மறைய வேண்டுமானால் உருளைக்கிழங்கை மேல்தோலோடு சீவி, சாறு எடுத்து கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கருவளையங்கள் மறையும்.

* கருவளையங்களை நீக்குவதில் வௌ¢ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வௌ¢ளரிக் காயால் தயாரிக்கப்பட்ட கிரீம்களை வாங்கி, கருவளையம் உள்ள பகுதிகளில் தடவி, அரைமணி நேரம் கழித்து, துடைத்து விட வேண்டும். இந்த கிரீம்களை தடவி கொண்டு, இரவில் தூங்கக் கூடாது. மேலும், வௌ¢ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல், சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் கண்கள் குளிர்ச்சியடைவதுடன், கருவளையமும் குறையும்.

* சுத்தமான பன்னீரில் பஞ்சை தோய்த்து, சிறிது நேரம் கண்களில் வைத்து ஓய்வு எடுக்கலாம்.

*விளக்கெண்ணெய் மற்றும் அகில் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து, கண்களில் படாமல், இமைப்பகுதி மற்றும் கண்களின் கீழ்பகுதிகளில் தடவி வரலாம். இதனால், கண்கள் வறட்சி அடையாமல் இருப்பதோடு, கருவளையமும் மறையும்.

* வௌ¢ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவ்தோடு, கருவளையங்களையும் போக்கும்.

* சூடு படுத்தி, வடிகட்டி, ஆற வைத்த தண்ணீரை இங்க் பில்லரில் நிரப்பி, கண்களில் ஒரு பக்கமாக கவிழ்த்தால் கண்கள் சுத்தமாகும்.

* ரொம்பவும் சுத்தமான தேனை ஒரு துளி கண்களுக்குள் விட்டுக் கொண்டால் கண்களுக்குள்ளிருந்த அழுக்குகள் எல்லாம் வெளியேறி, கண்கள் பளிச்சென மாறும்.

வீட்டிலேயே கண்மை!

கண் மையை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் தயாரித்து உபயோகிக்கலாம். முதலில் பஞ்சில் திரி செய்து அதை கரிசலாங்கண்ணிச் சாற்றில் அரை மணி நேரம் ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதே மாதிரி நான்கைந்து நாட்களுக்குச் செய்ய வேண்டும். பிறகு ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு, அதில் காய்ந்த திரிகளைப் போட்டு, எரிய விட வேண்டும். அதை ஒரு கொட்டாங்குச்சி அல்லது சட்டியால் பாதியாக மூட வேண்டும். அந்தக் கொட்டாங்குச்சி அல்லது சட்டியினுள் சந்தனம் தடவப்பட்டிருக்க வேண்டும். திரி எரிந்து மூடியுள்ள சட்டியில் கருப்பான பவுடர் மாதிரிப் படியும். அத்துடன் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம்.

Leave a Comment