முதியவர்களுக்கு கண் பரிசோதனை, இலவச கண்ணாடிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 119

முதுமையின் காரணமாக பெரும்பாலான மக்களுக்கு கண் பார்வைக் குறைபாடு ஏற்படுவது சகஜம். கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை குறைபாட்டை இளம் வயதிலேயே கண்டறிந்துவிடுவார்கள். ஆனால், முதுமை காரணமாக ஏற்படும் கண்புரை நோயை அறியாமலே இருப்பார்கள். கண்ணின் லென்ஸ் மேகமூட்டமாக மாறி, பார்வை தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வரும்.

இதன் காரணமாக வண்ணங்கள் மங்கலாகத் தோன்றுவதுடன் விளக்குகளின் ஒளி கண்ணை கூசுவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும். நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்களிலுள்ள புரதம் எளிதில் வறண்டுவிடுவதால் கண்புரை ஏற்படுகிறது.  பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வைக் குறைபாடு ஏற்படும் என்றாலும், இவை எதுவும் ஒரே நாளில் நிகழ்வதில்லை என்பதால் இந்த மாற்றங்களை உணர மாட்டார்கள்.

வயதானால் கண்ணு இப்படி மங்கலாகத்தான் இருக்கும், இது சகஜம் என்று நினைத்துக்கொண்டு, மங்கலான பார்வையுடனே வாழ்கிறார்கள். எனவே, இந்த குறையுடன் வாழும் முதியவர்களுக்கு கேட்ராக்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு கொடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி தீவிரம் காட்டினார். மிகுந்த அக்கறை காட்டினார். அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தெளிவான பார்வை கிடைத்துவிடும். யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் நிறைய கண் பரிசோதனை முகாம் நடத்துவதற்கு சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார்.

கண் புரை ஏற்பட்டவர்களுக்கு கேட்ராக்ட் சிகிச்சை வழங்குவதற்கும் பார்வைக் குறை உள்ளவர்களுக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்குவதற்கும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் பயன் அடைந்தார்கள். புதிதாக பார்வை பெற்ற முதியவர்கள் தன்னம்பிக்கை பெற்றதுடன் மீண்டும் தங்களுக்குத் தெரிந்த வேலைகளைச் செய்து சம்பாதிக்கவும் முடிந்தது. எனவே தொடர்ட்ந்து கண் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்த சைதை துரைசாமிக்கு மக்களிடம் பாராட்டுகள் கிடைத்தன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment