கண்ணைக் கவரும் மிதி வண்டிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 250

பெருநகர சென்னைக்கு சைக்கிள் சேரிங் சிஸ்டத்தை மேயர் சைதை துரைசாமி கொண்டுவரப் போகிறார் என்பது மக்களுக்கு வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. சென்னை மக்களை மேலும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் அட்டகாசமான தரத்துடன் மாடர்ன் சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு உருவான சைக்கிள் நிறுத்தங்களையும், வந்து இறங்கிய சைக்கிள்களையும் மக்கள் பார்த்து பாராட்டினார்கள்.

சைக்கிள் வாடகைக்கு எடுப்பதில் இருந்த குழப்பங்கள் தீர்க்கப்பட்டன. சைக்கிள் வாடிக்கையாளராக விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு அல்லது முன்பணம் செலுத்தி தங்கள் முகவரி, அடையாளம் போன்றவற்றை பதிவுசெய்து ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்கள்,  அவர்களுக்குத்  தேவைப்படும்  இடத்தின் அருகில் உள்ள  நிறுத்தத்தில்  இருந்து  கார்டு  உதவியுடன் மிதிவண்டியை  தானியங்கி  பூட்டிலிருந்து  விடுவித்து  எடுத்து  பயன்படுத்திக் கொள்ளலாம். 

சைக்கிள் எடுத்தவுடனே அந்த நேரம் உபயோகிப்பாளரின்  கணக்கில் கம்ப்யூட்டர் மூலம்  பதிவு செய்யப்படும்.   சைக்கிளின் பயன்பாடு முடிந்ததும்  அதே நிறுத்தத்தில்  அல்லது  வேறு  ஏதாவது ஒரு நிறுத்தத்தில் விட்டுவிடலாம்.  சைக்கிளை விட்டதும்  தானியங்கி இயந்திரம்  மூலம்  சைக்கிள் பூட்டிக்கொள்ளும். அதுவரை அவர் பயன்படுத்திய நேரம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு, சரியான கட்டணம் மட்டும் அவரது கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

எந்த நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு குறைவான வாடகை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறதோ, அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்வதாக மாநகராட்சி மூலம் முடிவெடுக்கப்பட்டது. * இந்தத்  திட்டத்தை  நடைமுறைபடுத்த தோராயமாக  40 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.   இந்தத்  தொகை  சென்னை மாநகராட்சிக்கு  உறுப்பினர்  சேர்க்கை  கட்டணம்,  உபயோகிப்பாளர்  கட்டணம் மற்றும் விளம்பரங்களில் இருந்து  ஈடுகட்டவும் முடிவு செய்யப்பட்டது,

 இந்தத்  திட்டம் முறையாக பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னைக்கு பயணம் வருபவர்களுக்கு, ஊர் சுற்றிப் பார்க்க இந்தத் திட்டம் குறைந்த செலவில், மிகுந்த பயன் தருவதாக இருக்கும். மிதிவண்டி  பயன்படுத்தினால்,  பெட்ரோல், டீசல்  போன்ற  செலவுகள்  கிடையாது என்பதுடன்   மிதிவண்டி பயன்படுத்துவது மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பதால், ஆரோக்கிய வாழ்க்கையும் கிடைக்கும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment