என்ன செய்தார் சைதை துரைசாமி – 378
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பீஜிங் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேயர் சைதை துரைசாமி மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு அவரது அரசியல் எதிரிகள் அரசாணை கிடைப்பதை தாமதம் செய்தனர். வேறு யாரேனும் மேயர் சைதை துரைசாமியின் இடத்தில் இருந்திருந்தால், அரசு அனுமதி கிடைக்குமா இல்லையா என்று தெரியாமல், நேரத்தின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பயணத்தை கேன்சல் செய்திருப்பார்கள். ஆனால், அந்த நேரத்தில் மேயர் சைதை துரைசாமி கொஞ்சமும் மனம் தளராமல் மன உறுதியுடன் இருந்தார்.
இதற்கு முக்கியமான காரணம் மனிதநேய மாணவர்கள். மனிதநேய இலவச ஐஏஎஸ் அறக்கட்டளை முலம் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற பதவிகளில் இருந்த மாணவர்கள் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் குறுகிய காலத்தில் பெற்றுத்தருவதற்குத் தயாராக இருந்தார்கள். எனவே தாமதமாகவேனும் கண்டிப்பாக அனுமதி கிடைத்துவிடும் என்றே நம்பினார்.
ஏனென்றால் இந்த பயணத்துக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா அனுமதி கொடுத்துவிட்டார். ஆகவே, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கும். நிர்வாகத்தில் ஜெயலலிதா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார். எனவே, தாமதம் செய்ய முடியுமே தவிர, அனுமதி கொடுக்காமல் இருக்க முடியாது என்ற உறுதியுடன் தயாராக இருந்தார்.
அதனால் மாலை 6:30 மணிக்கு அனுமதி கிடைத்ததும் துல்லியமாகச் செயல்பட்டு அதன்பிறகு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்துவிட்டு இரவு 9 மணிக்கு டெல்லி விமானத்தில் ஏறினார். மேயர் சைதை துரைசாமியின் இந்த திட்டமிட்ட செயல்பாட்டைக் கண்டு அதிகாரிகள் மலைத்துப் போனார்கள்.
இரவு 9 மணிக்கு டெல்லி கிளம்பிய மேயர் சைதை துரைசாமி விமானநிலையத்தில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தைச் சென்றடைந்தார். எத்தனை மணி நேரம் தாமதமாகப் படுத்தாலும் அதிகாலை எழும் பழக்கம் மேயர் சைதை துரைசாமிக்கு உண்டு. எனவே, வழக்கம்போல் அதிகாலை எழுந்து யோகாசனம் உள்ளிட்ட காலைப் பணிகளை முடித்தார். மதியம் 1:50 மணிக்கு பேங்காக் நகரத்திற்குச் செல்லும் விமானத்தைப் பிடித்து சீன நேரப்படி மாலை 7:30 மணிக்குச் சென்றடைந்தார்.
- நாளை பார்க்கலாம்.