உண்மை காரணம் இது தானா…?
நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவியைப் பறித்திருக்கிறார். இதெல்லாம் ஒர் விஷயமா என்று தளவாய் இந்த விவகாரத்தை கேஷ்வலாக எடுத்துக்கொள்ளும் நிலையில், உண்மையான காரணம் வெளியாகி இருக்கிறது.
இது குறித்துப் பேசும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், ‘’ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின்கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் தளவாய் சுந்தரம் மீது இப்படியொரு அதிரடியான முடிவை இதன் மூலம் எடுத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
கட்சி நிர்வாகிகள் மீது,முக்கியமாக மாவட்ட செயலாளர்கள் அதிகாரத்தை மீறி எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளார் என ஊடகங்கள் முதல் எதிர்கட்சிகள் என அனைவரும் அவர் தலைமை பதவி மீது விமர்சனம் வைத்தார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
பா.ஜ.கவிடம் இருந்து அதிரடியாக முடிவெடுத்து தன்மானத்திற்காக கூட்டணியில் இருந்து வெளியே வந்தாரே அதேப் போல் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் கட்சி பதவி பறிப்பு மூலம் தான் அரசியலில் எதற்கும் பயப்படாமல் துணிந்து நடவடிக்கை எடுப்பதில் உறுதியானவர் மட்டுமல்ல தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பிற மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை’ என்கிறார்கள்.
ஆனால், தளவாய் தரப்பினர், ‘’சமீபத்தில் டெல்லி பா.ஜக.வுடன் தளவாய் சுந்தரத்துக்கு டீல் பேசியிருக்கிறார். பன்னீர்செல்வத்துடன் தொடர்பில் இருக்கிறார். அதனாலே இந்த நடவடிக்கை என்கிறார்கள்…’’
அடிப்படைஉறுப்பினரில் இருந்து நீக்குவாரா எடப்பாடி பழனிசாமி என்பது தான் இப்போது கேள்வி.