• Home
  • சர்ச்சை
  • காலை வெட்டிக்கொண்ட தொண்டருக்கு எடப்பாடி நிதியுதவி

காலை வெட்டிக்கொண்ட தொண்டருக்கு எடப்பாடி நிதியுதவி

Image
  • இது நல்ல முன்னுதாரணமா?

தூத்துக்குடியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான 75 வயதாகு செல்வக்குமார் என்பவர் தீவிர அ.தி.மு.க. விசுவாசி. நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று பலரிடமும் தெரிவித்து வந்தார்.

ஒரு டீ கடையில் இருந்த நபரிடம் பேசியபோது அவர் அ.தி.மு.க. ஜெயிக்காது என்று கூற, என்ன பந்தயத்துக்கு வேண்டுமானாலும் வருவதாகக் கூறியிருக்கிறார். பணம் இல்லை என்று சொன்னதால், காலை வெட்டிக் கொண்டு பூமிக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும் என்று சொன்னாராம்.

அந்த போட்டியை ஏற்றுக்கொண்டார் செல்வகுமார். தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க. அத்தனை தொகுதிகளிலும் தோற்றுப் போனது. இதையடுத்து தனது காலை வெட்டி ரத்தத்தை வெளியேற்றியிருக்கிறார். அதன்பிறகு மற்றவர்கள் சமாதானம் செய்தவுடன் மருத்துவமனைக்குப் போய் கட்டுப் போட்டுக்கொண்டார்.

தகவல் அறிந்து கழக வர்த்தக அணி செயலாளர். சி.த. செல்லப்பாண்டியனை அழைத்த எடப்பாடி பழனிசாமி அந்த தொண்டரை தன்னிடம் அழைத்துவரச் செய்திருக்கிறார்.

உடனே செல்வகுமார் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  செல்வகுமாருக்கு எடப்பாடி நம்பிக்கை கொடுத்து நிதியுதவி வழங்கியிருக்கிறார். இந்த செய்தியை அ.தி.மு.க.வினர் கொடை வள்ளல் என்று பாராட்டி பரப்பி வருகிறார்கள்.

தொண்டர்களுக்கு அ.தி.மு.க. மீது இத்தனை விசுவாசம் இருப்பது நல்ல விஷயம். ஆனால், இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் நபர்களை ஊக்கப்படுத்துவது மேலும் சிலர் தவறு செய்யக் காரணமாகிவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

உண்மை தான். எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டுமே தவிர ஊக்கப்படுத்தக் கூடாது.

Leave a Comment