ஜானகியாக மாற வேண்டியது எடப்பாடியா… பன்னீரா..?

Image

அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

அண்ணா தி.மு.க. சார்பில் புரட்சித்தலைவியின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். ஆடல், பாடலுடன் ஜோராக நடந்திருக்கும் இந்த நிகழ்வை அடுத்து ஜானகியாக மாற வேண்டியது யார் என்று அ.தி.மு.க.வுக்குள் தள்ளுமுள்ளு நடக்கிறது.

இன்று பேசிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார், ‘’எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என அதிமுக இரண்டாகப் பிரித்து 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த போது ஜெயலலிதா அணிதான் 28 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி அணிக்கு ஒரு தொகுதிதான் கிடைத்தது. அதன் பிறகு ஜானகி ஒதுங்கிக் கொண்டார். அதிமுக ஒன்றாக இணைந்தது. அப்படி ஜானகியைப் போல சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதில் சொல்லும் பன்னீர் டீம், ஜெயலலிதா வென்று காட்டினார். ஜானகி அணியை வீட தனக்கு செல்வாக்கு இருப்பதை உறுதிபடுத்தினார். ஆனால்  எடப்பாடி பழனிசாமி என்னச் செய்தார்?

அவர் அதிமுகவில் பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்ந்து 9 தேர்தல்களில் அதிமுக தோற்றது. கொஞ்சம் வெற்றியையாவது பெற்றிருந்தால், சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை ஒதுங்கச் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஜானகியம்மையார் எந்த நிபந்தனயும் விதிக்காமல் இணைப்பு நடத்தியது போன்று எடப்பாடி பழனிசாமியும் இணைப்பு நடத்த வேண்டும்’’ என்கிறார்கள்.

Leave a Comment