• Home
  • அரசியல்
  • ஆசிரியர்களுக்கு டபுள் மீனிங் கட்டுப்பாடு

ஆசிரியர்களுக்கு டபுள் மீனிங் கட்டுப்பாடு

Image

அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அரசு பள்ளியில் நுழைந்து மகாவிஷ்ணு செய்த அட்டூழியம் காரணமாக, புதுப்புது கட்டுப்பாடுகள் இப்போது விதிக்கப்பட்டுள்ளன. அதன் படி தமிழகத்தின் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

அந்த அறிக்கையில், ’’பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், மாணவர்களிடம் நேரடியாக பேச அனுமதிக்கக்கூடாது.

முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், கல்வி சாரா நிகழ்ச்சியையோ, விழாவையோ பள்ளியில் நடத்தக்கூடாது. தேசிய சுகாதார இயக்கக மருத்துவ குழுவினரை தவிர, மற்ற குழுவினரை மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கூடாது.

முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், போட்டிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது.

அரசு ஊதியம் பெறும் தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்டோரை தவிர, மற்றவர்களை பாடங்கள் நடத்த அனுமதித்தால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்மறையாகவோ, இரட்டை அர்த்தத்திலோ, தொலைபேசியிலோ பேசக்கூடாது. மாணவர்கள் வருகை தொடர்பாக, பெற்றோரிடம் மட்டுமே பேச வேண்டும்.

விடுமுறை நாட்களில், பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை. முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி மட்டுமே, அரசு நிகழ்ச்சியை அனுமதிக்கலாம்..’’

இந்த கட்டுப்பாடுகளை தனியார் பள்ளிகளுக்கும் கொண்டுவர வேண்டும், அப்போது தான் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடத்துவதை தடுக்க முடியும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

Leave a Comment