• Home
  • அரசியல்
  • ஸ்டெர்லைட் கொலைகாரர்களுக்கு பாரத ரத்னா விருது இல்லையா?

ஸ்டெர்லைட் கொலைகாரர்களுக்கு பாரத ரத்னா விருது இல்லையா?

Image

ஸ்டாலினுக்கு தர்ம அடி

இந்தியவையே அதிர வைத்த ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமாக இருந்த துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு அளித்திருக்கும் ஸ்டாலின் அரசுக்கு தமிழகமெங்கும் கடும் கண்டனம் எழுந்துவருகிறது. உடனடியாக இந்த உத்தரவை வாபஸ் வாங்க வேண்டும் என்று ஆலை எதிர்ப்பாளர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

இது குறித்து மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, ‘’திமுக ‘திராவிட மாடல் அரசு’ இந்த ஸ்டெர்லைட் கொலைகாரர்களுக்கு ‘பாரதரத்னா விருது’ கிடைக்க ஏன் முயற்சிக்க கூடாது? திமுக முயற்சி எடுத்தால், எடப்பாடியாரின் ஆட்சி காலத்தில் பாஜகவிற்கு நிதி கொடுத்த மார்வாடிக்காரன் கம்பெனிக்காக சொந்த மக்களை படுகொலை செய்ய உத்திரவிட்ட அலுவலருக்கு மோடி அரசு மரியாதை செய்யாமலா போகும்?

சமூகநீதிக்காக போராடுகிறோம் என்கிற திமுகவும் தன் பங்கிற்கு ஸ்டெர்லைட் படுகொலை குருதியில் கைநனைக்க நினைப்பதை கல்வெட்டில் கூட எழுதி வைக்கலாமே? ஸ்னோலின் எனும் 17 வயது மாணவியின் வாயில் சுட்டு படுகொலை செய்த காவலரை திமுக அரசு ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு கூட அனுப்பியிருக்கலாம்? இதையெல்லாம் செய்தால் திமுக அரசை அடுத்த ஆயிரம் ஆண்டுகள் தமிழர்கள் மறக்கமாட்டார்கள் அல்லவா?

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பாஜக, அதிமுக மட்டுமல்ல, திமுகவும் கடமைப்பட்டுள்ளது என தெரிவிக்க நினைப்பதை வெளிப்படையாக அறிவிக்கலாமே? நீதியரசர் அருணாஜெகதீசன் அறிக்கையை எந்த குப்பைத் தொட்டியில் வீசினோம் என்பதை திமுக அரசு தெரிவித்தால், ஸ்டெர்லைட் எதிர்ப்பில் உயிர்கொடுத்தோர், போராடியோர், சிறை சென்றோர், சிறையில் சித்தரவதை அனுபவித்த நானும் தோழர் வேல்முருகன் ஆகியோரும் உங்களை கண்டு பெருமையடைவோம்.

இதே போல ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேஸ்வரன் ஆணையத்தின் அறிக்கையையும் வெளியிடாமல் வைத்துள்ளதற்கும் சேர்த்து திமுக அரசின் மனித உரிமை உணர்விற்கு தனியாக பதக்கம் கொடுத்து கொண்டாடலாம். அதிமுகவின் அநியாயங்களை பாதுகாக்கும் திமுக அரசிற்கு வாழ்த்துகள்..’’ என்று கடுமை காட்டியிருக்கிறார்.

திராவிட மாடலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

Leave a Comment