பணமே மந்திரம்

வெற்றி அடைவதற்கு பின்புறக் கதவுகளை பயன்படுத்தினார் என்று அம்பானி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். நான் தோற்றுப்போயிருந்தால் என்னை விமர்சனம் செய்யமாட்டார்கள், தொழில் மூலம் கோடிகள் சேர்த்ததால் பொறாமையால் பேசுகிறார்கள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு முன்னேறினார் அம்பானி. அவரது கனவு முழுக்க முழுக்க வணிகமும் அதில் வெற்றியுமாக இருந்தது. அதனால் அந்த வெற்றியுடன் அவரிடம் பணமும் குவிந்தது.
உழைப்பு, திறமை, எதிர்கால கணிப்பு, அர்ப்பணிப்பு, லட்சியம் போன்றவையே அம்பானியை இந்தியாவின் முடிசூடா மன்னனாக மாற்றியது. அதனால் பணத்தை மட்டும் தேடினால் தொலைந்துபோவீர்கள். உங்கள் திறமையைக் கொண்டு முன்னேறுங்கள், உங்கள் பின்னே நாய்க்குட்டி போன்று பணம் வந்துசேரும்.
திருபாய் அம்பானியின் வெற்றிமொழிகள் இதோ…
- நீங்கள் கனவு காணவில்லை என்றால் யாராவது ஒருவர். அவரது கனவுக்கு உங்களை பயன்படுத்திக்கொள்வார்.
- பெரிதாக சிந்தியுங்கள், வேகமாக சிந்தியுங்கள், உடனடியாக காரியத்தில் இறங்குங்கள். ஏனென்றால் சிந்தனை உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை.
- முடியாது என்ற வார்த்தை ஒலிக்கும்போது நான் செவிடாக இருப்பேன்.
- வாய்ப்புகள் உங்களை சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கிறது.
- இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து ஊக்குவித்தால், ஒவ்வொருவரிடமும் இருக்கும் வரம்பற்ற ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- எப்போதும் மனம் தளரக்கூடாது. துணிச்சல்தான் ஊக்கம் தரும்.
- காலக்கெடுவை நோக்கி செல்லக்கூடாது, காலக்கெடுவை வெல்ல வேண்டும்.
- துணிவுடனும் கச்சிதமாகவும் ஒரு செயலை செய்துமுடிக்கும்போது நிச்சயம் வெற்றிவந்து சேரும்.