ஒவ்வோர் ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21ம் தேதி தொடங்கி வைகாசி 15ம் தேதியன்று முடிவுக்க் வ்ரும். அதன்படி இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடைகிறது. எனவே, வெயில் படிப்படியாக அதிகரிக்கும்.
வெயில் என்றதும் அலற வேண்டியதில்லை. மழையை எப்படி ஓரமாக ஒதுங்கி நின்று ரசிக்கிறோமோ, அதே மனநிலையில் வெயிலையும் ரசிக்கத்தான் வேண்டும். நம்மால் மாற்ற முடியாத இயற்கை சூழலை அப்படியே ஏற்றுக்கொள்வதே சிறந்த வழி.
வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
இந்த காலகட்டத்தில் குளிர்ச்சியாக குடிப்பதற்கு ஆசையாக இருக்கும் என்றாலும் ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு ஐஸ் போடாமல் அருந்தலா. இளநீர், பதநீர் பருகலாம். இவை எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர்.
எப்போதும் கைவசம் மோர் வைத்திருங்கள். எங்கு சென்றாலும் பாட்டிலில் எடுத்து செல்லுங்கள். அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும்.
மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம். வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு.
உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம். மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும். வெயில் எல்லா உயிர்களுக்கும் நண்பன். ஆகவே வரவேற்போம். ரசிப்போம். இதுவே வெயிலின் கொடுமையை தவிர்க்கும் எளிய வழி