ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஆண் இல்லாமல் பெண்ணால் வாழமுடியுமா?
- என்.ஜெயராஜ், கடலூர்.
ஞானகுரு :
நிச்சயம் முடியும். கணவனை இழந்த மனைவிகள் பழுத்த பழமாகியே வெடிக்கிறார்கள். ஆனால் மனைவியை இழந்த கணவன்களால் நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. காரணத்தை யோசித்துப்பார். பெண்ணின் வலிமை புரியும்.
கேள்வி : தலைச்சன் பிள்ளையின் மண்டையோட்டில் இருந்து எடுக்கப்படும் வசிய மைக்கு விஷேச சக்தி உண்டு என்கிறார்களே… அதில் ஏதேனும் உண்மை இருக்குமா?
- எஸ்.சங்கரபாண்டியன், வந்தவாசி.
ஞானகுரு :
உத்தண்ட காளி, உதிர காட்டேரி, மதுரை மீனாட்சி, சுடுகாடு காளிகளை எல்லாம் சாட்சியாக வைத்து, அந்த வசிய மையை கொடுத்து, உன்னிடம் பணம் கேட்பான். அந்த வசிய மையை வைத்து, அவனால் ஏன் எதையும் சாதிக்க முடியவில்லை என்று அந்தத் தரித்திரனைக் கேள். உண்மை புரியும்.