• Home
  • மனம்
  • திங்கள் கிழமையும் ஜாலியா இருக்கணுமா?

திங்கள் கிழமையும் ஜாலியா இருக்கணுமா?

Image

சிம்பிள் டிப்ஸ்

திங்கள் கிழமை என்றாலே நிறைய பேருக்கு காரணமே இல்லாமல் பயம், சோர்வு, பரபரப்பும் தோன்றிவிடுகிறது. இதனால் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நமது உடலின் மெட்டபாலிசத்தை சீராக பராமரித்து, முறையான தூக்க நேரத்தை கடைபிடிப்பதற்கு கார்டிசோல் என்னும் ஹார்மோன் உதவி செய்கிறது.

இந்த கார்டிசோல் ஹார்மோன் தினமும் நாம் விழிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக சுரக்க துவங்குகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு காரணமாகவே நமக்கு விழிப்பு வருகிறது. திங்கள், செவ்வாய் போன்ற வேலை நாட்களில் உடலில் கார்டிசோலின் அளவு அதிகமாகவும், ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதன் அளவு குறைவாக சுரப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. திங்கள், செவ்வாய் கிழமைகளில் கார்டிசோலின் தாறுமாறாக சுரப்பதால் மன அழுத்தம், குழப்பம், பதட்டம் போன்றவை உண்டாகின்றன.

திங்களன்றும் நாம் இயல்பாக எழுந்தரிக்க வேண்டும் என்றால் மூளையில் உள்ள ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் செயல்பாட்டை நாம் தூண்டிவிட வேண்டும். அதாவது, மனதை அமைதியடையச் செய்ய வேண்டும். இதனை செய்வதற்கு தினமும் ஒரே அளவு தூக்கத்தை பழக்கப்படுத்த வேண்டும். லீவு நாட்களில் அதிக தூக்கம், மற்ற நாட்களில் குறைவான தூக்கம் என்று பழக்கப்படுத்தக் கூடாது. மேலும், திங்கள் காலையில் எழுந்ததும் ஒரு குட்டி நடை, பதட்டத்தைத் தணிக்கும் வகையில் சுவையான காலை உணவு, இசை கேட்பது என ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் திங்கள் கிழமையும் கொண்டாட்டமாகிவிடும். கார்டிசோல் தினமும் ஒரே அளவுக்குச் சுரக்கத் தொடங்கிவிடும்.

Leave a Comment