இதோ 20 சிம்பிள் ஸ்டெப்ஸ்
வாழ்வது கொஞ்ச நாள்தான். அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆசையாக இருக்கிறதா..? இந்த 20 விஷயங்களை மட்டும் கடைப்பிடித்தால் போதும். ஆனந்தம் பொங்கி வழியும்.
1. அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.
2. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.
3. மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள். இரவு உறங்கும் முன்பு உங்களுக்குத் தவறு இழைத்தவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.
4.தேவையே இல்லாமல் எவரிடமும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
5. மனதை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.
6. எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம். சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.
7. நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.
8. பெற்றோர்கள் எப்போதும் தங்களுக்கு அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை தரும் வகையில் குழந்தையிடம் பழக வேண்டும்.
9. மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.
10. நாம் எப்போதுமே வெற்றி பெற்றுக் கொண்டிருக்க முடியாது. தோல்வியையும் ருசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
11. நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள், அதனால் எப்போதும் நட்பை கைவிடாதீர்கள்.
12. மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு பழக வேண்டும்.
13. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.
14. மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள். குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.
15. அச்சம் தவிருங்கள்.
16. இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.
17. நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இன்றைய தினத்தில் வாழுங்கள்.
18. சிரித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களோடு இணைந்து சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்களைப் பார்த்து நகைக்கக்கூடாது.
19. வெற்றி என்பது பணத்தினாலோ, பொருட்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே அமைகிறது.
20. எந்த நிலையிலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம்.