காரணம் தெரிஞ்சுக்கோங்க.
டூ வீலர் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, எட்டு போட்டு காண்பிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அது சரி, எதற்காக 8 போட வேண்டும்?
8ஐ தவிர, 1லிருந்து 9 வரை இருக்கும் அனைத்து எண்களுக்குமே ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் கட்டாயம் இருக்கும். ஆனால், 8 அப்படிக் கிடையாது. 8 ஆரம்பம் தெரிந்தாலும் அதற்கு முடிவு என்பதே கிடையாது. 8 என்ற எண் மட்டும் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு எண் வடிவம் ஆகும்.
ஓட்டுநர் உரிமம் பெறும்போது 8 வடிவத்தில் இருக்கும் இடத்தில் வாகனத்தை ஒட்டி காட்ட வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி நாம் 8 என்ற வடிவத்தில் வண்டி ஓட்டிக் காட்டும்போது கால்களை தரையில் வைக்காமல் வண்டியை இயக்க வேண்டும்.
அதுபோல, 8 என்ற வடிவத்தில் வாகனத்தை ஓட்டிக் காட்டும்போது வலப்பக்கம் திரும்புவது, இடப்பக்கம் திரும்புவது மற்றும் குறுக்கே திரும்புவது அதேபோல அகலமான வளைவுகளில் யூ-டர்ன் செய்து கடப்பது போன்ற செயல்கள், 8 என்ற வடிவத்தில் வண்டியை ஓட்டிக் காட்டும்போது சவாலானதாக இருக்கும்.
அதுபோல, வாகனத்தில் செல்லும்போது சாலைகளில் பல இடங்களில் வளைவுகள் இருக்கும். அதை நாம் பாதுகாப்பாகவும், தைரியத்துடனும் கடந்து செல்ல வேண்டும். அப்படி நாம் சாலைகளில் இருக்கும் எட்டு போன்ற வளைவுகளை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஓட்டுநர் உரிமம் பெறும்போது 8 போடச் சொல்கிறார்கள்.
இப்படி 8 வடிவத்தில் இருக்கும் சவால்களை கடந்து, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதுபோல, ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை ஓட்டுவது மிகவும் நல்லது.
8 போடச் சொல்வது நாம் வாகனத்தை விபத்துக்கள் இல்லாமல் சாலையில் இயக்குவதற்காகத்தான் என்பதை உணர்ந்து முறைப்படி 8 போட்டு ஓட்டுநர் உரிமம் பெறுவோம்.