• Home
  • உறவுகள்
  • பிள்ளைகளின் ஆடம்பர வாழ்வு வெறுப்பா இருக்குதா..?

பிள்ளைகளின் ஆடம்பர வாழ்வு வெறுப்பா இருக்குதா..?

Image

பெற்றோர்களுக்கு ஆலோசனைகள்

பிள்ளைகள் படிப்பு முடிந்து வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கியதுமே அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான தொடர்பு முறிந்துவிடுகிறது என்பதே உண்மை. ஆனால், நம் பெற்றோர் திருமணம் முடித்துக் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைக்கிறார்கள். அதேபோல் பேரன், பேத்திகளை வளர்ப்பதும் தங்கள் கடமை என்றே நினைக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால் திருமணத்திற்குப் பிறகும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது பொறுப்புகள் எடுப்பதே நிறைய வெறுப்புகளுக்குக் காரணமாகிறது. ஆகவே, பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தவர்கள் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கையும் பிள்ளைகள் வாழ்க்கையும் இனிமையாக நகரும்.

  • வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒரு பிள்ளையை சார்ந்தே வாழ வேண்டும் என்ற நினைப்பில் இருந்து வெளியே வாருங்கள்.  
  • பேரக்குழந்தைகளின் மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. மற்றவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம்.
  • குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள
  • முடிந்த வரையிலும் விலகியே இருங்கள் உறவுகள் இனிமையாகத் தான் இருக்கும். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியாக இருங்கள்
  • உங்களுக்கென சேமிப்பு வைத்திருங்கள். பணம் இல்லாதவர்களுக்கு பிள்ளைகளிடம் மதிப்பும், மரியாதையும் கிடைக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்திய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம்.
  • காலம் முழுதும் பிள்ளைகள் நலனுக்கு கடுமையாக உழைத்திருப்பீர்கள், நிறைய இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். ஆனால், அவற்றை திரும்பத் திரும்ப சொல்லி காட்ட வேண்டாம். அவை எல்லாமே பெற்றோரின் கடமைகள் மட்டுமே.
  • கூட்டு குடும்ப வாழ்வு என்பது இப்போது நடைமுறையில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  • மகன் அல்லது மகளுக்கு ஆதரவு கொடுத்து தங்கள் கணவன் அல்லது மனைவியை மட்டம் தட்டவோ, அவமானப்படுத்தவோ செய்யாதீர்கள். தம்பதிக்குள் ஒற்றுமை இல்லை என்றால் இருவருக்கும் மதிப்பு இருக்காது.
  • பிள்ளைகள் வீட்டிற்கு செல்லும்போது உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்
  • பிள்ளைகளின் ஆடம்பர வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம். அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்.
  • பிள்ளைகள் உங்களை விட அறிவிலும், திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது, நீங்கள் முட்டாள்களாக நடியுங்கள்.

Leave a Comment