வெட்கம், மானம் மனிதருக்குத் தேவையா..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : வெட்கம், மானம், ரோஷம் போன்றவைகளை எந்த இடத்தில் பார்க்கலாம், எந்த இடத்தில் பார்க்கக்கூடாது?

  • ஆர்.ஜமுனா ராணி, காவேரி நகர்.

ஞானகுரு :

வெட்கம், மானம், ரோஷம் போன்றவை அறிந்த நபர்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே உருவாகின்றன. தனிமையில் இருக்கையில், யாரும் அறியாத இடங்களில் யாரும் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. ஆகவே, எப்போதும் நாம் தனிமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டால் போதும். வெட்கம், மானம், ரோஷம் போன்றவற்றை குப்பைக் கூடையில் போடுங்கள்.

கேள்வி ;சர்க்கரை நோய், இதயநோய் பெருகக் காரணம் உடற்பயிற்சி இன்மையா, விழிப்புணர்வின்மையா?

  • கே.கந்தவேல், கூரைக்குண்டு.

ஞானகுரு :

எந்த ஒரு நோய்க்கும் ஒரே ஒரு காரணம் மட்டும் இருப்பதில்லை. பரம்பரைத்தன்மை, உணவு, உறக்கம், சுற்றுச்சூழல், மனநிலை போன்ற பல்வேறு காரணிகளாலே நோய்கள் தோன்றுகின்றன. இப்போது தெருவுக்குத் தெரு பரிசோதனை நிலையங்கள் வந்ததாலே நோயை முன்கூட்டி இத்தனை பேர் அறிய முடிகிறது. இது வளர்ச்சி, விழிப்புணர்வு என்றே பார்க்க வேண்டும். நோய் அதிகரித்துவிட்டது என்று அதிர்ச்சியடைய அவசியம் இல்லை.

கேள்வி : இன்று குடும்பங்களில் ஜெயிக்கிறது பந்த பாசமா அல்லது பணமா..?

  • எம்.விநோதினி மனோகரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

பணத்தால் ஜெயிக்க முடியும் என்றால் செல்வந்தர் வீடுகளில் சண்டை வரக்கூடாது, டைவர்ஸ் நடக்கக்கூடாது. ஆனால், அங்குதான் நிறைய பிரச்னைகள் நடக்கின்றன. ஆகவே, பணத்தில் குடும்பம் இல்லை என்பது உறுதியாகிறது. அன்பு மட்டுமே குடும்பத்தை சேர்த்து வைக்கும். பாசம் மட்டுமே நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

Leave a Comment