• Home
  • அரசியல்
  • டோல்கேட் மாமூலில் தி.மு.க.வுக்கும் பங்கு..?

டோல்கேட் மாமூலில் தி.மு.க.வுக்கும் பங்கு..?

Image

மீண்டும் 3 டோல்கேட் உதயம்

தமிழகத்தில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டன என்று அமைச்சர் எ.வ.வேலு பொத்தாம் பொதுவாக சொல்கிறார் என்றாலும், அவற்றை இழுத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் புதிய டோல்கேட் திறக்க இருப்பது மக்களிடம் கடும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலத்தை முடிந்தும் வசூல் வேட்டை செய்கிறது என்று சொன்ன அமைச்சர் எ.வ.வேலு, அவை எந்த டோல்கேட் என்று சொல்ல மறுத்துவிட்டார்.

இது குறித்து அறப்போர் இயக்கத்தினர், ‘’காலாவதியான டோல்கேட் ஆதாரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும். அல்லது பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்த அருமையான வாய்ப்பு. அதையாவது செய்ய வேண்டும். வெறுமனே ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசினால் அடுத்தும் இப்படித்தான் சுங்கச்சாவடிகள் திறப்பார்கள்.

இவர் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் தானே, 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் வாங்குகிறார்கள் என்கிறார். எந்தெந்த சுங்கச்சாவடிகள் என்றால், திடீர்னு கேட்டா சொல்ல முடியாது என்கிறார்.

இவர் குறிப்பிட்டு சொல்லும் நான்கில்..‌ ஸ்ரீபெரும்புதூர் என்பதும் இருங்காட்டுக்கோட்டை என்பதும் ஒன்றுதான். பரனூர் டோல் முடிந்துவிட்டது என்றால், அடுத்து வரும் ஆத்தூர் (திண்டிவனம்) டோலும் முடிந்து விட்டது என்று தான் அர்த்தம். இவை முடிந்து விட்டது என்றால் வானகரம் டோலும் அவ்வாறே தானே வரும்?

கடிதம் எழுத முடியுமே ஒழிய நாங்க என்ன பண்ண முடியும் என்று மாநில அமைச்சரே கேட்பது சரியல்ல. எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டு பேசலாம், ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றால் கோர்ட்டுக்கு போகலாம். மக்கள் அவதிப்படுகிறார்கள் ஆனால் இவ்வாறு பேசுவது backfire ஆகிட வாய்ப்புள்ளது என தெரியாமல் பேசுகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், விழுப்புரத்தின் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலையின் கரியமங்கலம், கிருஷ்ணகிரியின் நாகம்பட்டி ஆகிய இடங்களில் மூன்று டோல்கேட் திறக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த டோல்கேட் வசூலில் அமைச்சருக்கு பெரிய கட்டிங் போவதாலே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

மக்கள் தான் இளிச்சவாயர்கள்.

Leave a Comment