எட்டு எட்டா பிரிச்சுக்கோங்க

Image

ஒரு நாள் என்பதை எட்டு எட்டாக மூன்று பகுதியாகப் பிரித்து செயல்படுவதன் மூலம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்று மனநல ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதல் எட்டு மணி நேரம் என்பது வேலை. இரண்டாவது எட்டு மணி நேரம் தனி மனித வாழ்க்கை. மூன்றாவது எட்டு மணி நேரம் தூக்கம்.

முதல் எட்டு மணி நேர உழைப்பு மனிதர்களின் வாழ்வாதாரம். எனவே சுறுசுறுப்புடன் உழைப்பது, திட்டமிடுதல், ஆற்றலை வெளிப்படுத்துதல், ஆளுமை, சிக்கலை தீர்த்தல், சமயோசித புத்தியை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவை எட்டு மணி நேரம் சீராக செயல்படும். இதனை தாண்டும்போது சிந்தனை மட்டுப்படும்.

அடுத்த எட்டு மணி நேரம் உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்வு நேரம். உழைப்பின் மூலம் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் அழுத்தம் போன்றவை நீக்கப்பட வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டு, அரட்டையடித்தல், பிடித்த காரியம் செய்தல், நடனம், இசை, புத்தகம் வாசித்தல், சாப்பிடுதல், புதிய முயற்சி, தோட்டம் என்று மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்க வேண்டும்.

அடுத்த எட்டு மணி நேர சீரான தூக்கம் அவசியம். வேலையால் பெற்ற சோர்வு, பதற்றம், தசை இறுக்கம் மற்றும் அழுத்தத்தை விடுவித்து, உடலின் உள்உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, படைப்பாற்றல், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யவும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். ஒவ்வொரு செல்லும் புத்துயிர் பெறவும், சருமப்பொலிவு பெறவும், செரிமானம் சீராக நடைபெறவும் இந்த தூக்கம் அவசியம்.

Leave a Comment