பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  267

மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்த பிறகு மிக அதிக எண்ணிக்கையில் பாலங்கள் கட்டி சாதனைகள் படைத்தார் என்றால், அந்த அளவுக்கு அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினார். எந்த திட்டத்துக்கு முன்னுரிமை கொடுப்பது, எதனை சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்துவது என்று மேயர் பணியில் முழு நேரமும் செயல்பட்டார்.

சைதை துரைசாமிக்கு முந்தைய மேயர் காலத்தில் 46 பாலங்கள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு, இவற்றில் 22 பாலங்கள் கைவிடப்பட்டன. 9 பாலங்கள் அறிவிப்பில் இடம் பெற்று இருந்தாலும் பணிகள் முடிக்கப்படவில்லை. அதனால் மொத்தமே 15 பாலங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டன. இவற்றில் வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை சந்திப்பு, உஸ்மான் சாலை மற்றும் துரைசாமி சாலை சந்திப்பு, கோபதி நாராயணா சாலை மற்றும் திருமலை சாலை சந்திப்பு, டர்ன்புல்ஸ் சாலை மற்றும் செனடாப் சந்திப்பு, பெரம்பூர் மேம்பாலம் ஆகிய 5 மேம்பாலப் பணிகளுக்கான பூர்வாங்க அறிக்கைகள் 1997 முதல் 2000 காலகட்டத்தில் முடிக்கப்பட்டவை ஆகும்.  

இதுதவிர, ஆலந்தூர் சாலையில் வாகனப் பாலமும், ஜோன்ஸ் சாலையில் வாகனச் சுரங்கப் பாதையும் 2004-ல் சாத்தியக்கூறு மற்றும் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பாலம் கட்டவேண்டிய அவசியம் குறித்து சைதை துரைசாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார். இதன் கட்டுமானப் பணிகள்தான் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இவை தவிர தங்கசாலை சந்திப்பில் மேம்பாலம், வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, மணியக்கார சத்திர தெரு சுரங்கப்பாதை, கத்திவாக்கம் காக்ரேன் இரயில்வே மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம்,  எம்.கே.பி.நகரில் உயர்மட்ட பாலம், நரசிம்ம நகர் எம்.எஸ். நகர் பாலம் ஆகிய 7 பாலப் பணிகளுக்கும் சைதை துரைசாமி மேயராக வந்தபிறகே நிதி ஒதுக்கப்பட்டது.

 மாற்றுக்கட்சி பதவியில் இருந்த நேரத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சி இன்றி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சைதை  முன்வந்தார். அவரது அக்கறை மற்றும் முயற்சியினால்  7 பாலப் பணிகளும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment