• Home
  • தமிழ் லீடர்
  • எடப்பாடி பழனிசாமி இப்படியொரு தில்லுமுல்லு செஞ்சாரா..?

எடப்பாடி பழனிசாமி இப்படியொரு தில்லுமுல்லு செஞ்சாரா..?

Image

நீதிமன்றத்தில் விசாரணை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவிரி நீரை முறைகேடாகப் பயன்படுத்தி தில்லுமுல்லு செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த விஷயத்தில், முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி அதிகார துஷ்பிரயோகம் செய்தது பற்றி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியில் காவிரிநீர் எடுக்க அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்தி முறைகேடு செய்த எடப்பாடி பழனிசாமி…. 5 குதிரைத் திறன்(HP) கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே அனுமதி இருந்த நிலையில், 27 குதிரைத் திறன்(HP) கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்த 2020 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியது எடப்பாடி பழனிசாமி அரசு.

இதற்கு முக்கிய காரணம் நெடுங்குளம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்களின் நிலம் இருப்பதால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசாணை பிறப்பித்தார். அதன் பொருட்டு இந்த வழக்கு தொடரப்பட்டது எடப்பாடி பழனிசாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், அவரின் பொறுப்பில் இருந்த அந்த துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் புகார்  செய்யப்பட்டது.

இந்த விஷயத்தில் தான் எடப்பாடி பழனிசாமி, அவரது சகோதரர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடியா அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்று இதற்கும் பதில் அளிப்பாரா எடப்பாடி பழனிசாமி..?

Leave a Comment