• Home
  • காமம்
  • இரண்டு ஆண்களுடன் அனுபவிக்க ஆசை..?

இரண்டு ஆண்களுடன் அனுபவிக்க ஆசை..?

Image

எல்லை தாண்டும் காமம்

முப்பத்தைந்து வயதுப் பெண் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். தனிமையில் வந்திருந்தார். மிகவும் தடுமாற்றத்துடன் ஒரு கேள்வி கேட்டார்.

‘’என்னுடைய கணவர் ஆசையைத் தூண்டிவிட்டு உறங்கிவிடுகிறார். என்னால் மோகத்தைக் கொல்ல முடியவில்லை. திசை மாறிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. உடல் ஆசையை அடக்குவதற்கு வழி காட்டுங்கள்’’ என்று கேட்டார்.

‘’புதைக்கும் விதைகள் முளைக்குமே தவிர மரணிக்காது. காமமும் அப்படித் தான். அடக்குவது ஆபத்தான வழி. எனவே அனுபவித்துவிடுங்கள்…’’

‘’அது தான் முடியவில்லை. கணவருடன் நன்றாக அனுபவிக்கும் ஆசை வருகிறது. ஆனால், அவரால் சில நிமிடங்கள் மட்டுமே இயங்க முடிகிறது. அதோடு முடித்துக்கொள்கிறார். நான் வேதனையில் துடிக்க வேண்டியிருக்கிறது. சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்.

இப்போது எந்த ஆணைப் பார்த்தாலும் அனுபவித்துவிடலாமா என்று தோன்றுகிறது. செல்போனில் வீடியோக்கள் பார்ப்பதால் இப்போது விதவிதமாக அனுபவிக்கும் ஆசை வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு நான்கு ஆண்களுடன் கூட உடலுறவு கொள்ள ஆசை வருகிறது…’’

’’வெளிப்படையாகப் பேசுவது நல்லது. இப்படி பேசுவதே மனதுக்கு விடுதலை கொடுத்துவிடும். இயற்கை விசித்திரமானது. மற்ற அனைத்து உயிரினனங்களுக்கு எல்லாம் சந்ததி உருவாக்கும் பணிக்காக மட்டுமே காமம் இருக்கிறது. ஆனால், மனிதர்களால் மட்டுமே அதனை உயிரை நீட்டிக்கும் பணி இல்லையென்றாலும் அனுபவிக்க முடிகிறது.

காமம் தவறு இல்லை. ஆனால், இருவர், மூவர், நால்வர் என்பதெல்லாம் ஒரு முடிவில்லாத விளையாட்டு. அது போன்ற படங்களைத் தொடர்ந்து பார்க்க வைப்பதற்கான தூண்டில். எனவே, இது போன்ற படங்கள் பார்ப்பதை நிறுத்து. இவை உன் மனதிலும் உடலிலும் நஞ்சைக் கலந்துவிடும். இன்பம் தருவதற்கு ஒரே ஒருவர் போதும், அதுவும் இல்லையென்றால் தனிமை போதும்…’’

‘’அது தான் என கணவர் ஒத்துழைக்க மறுக்கிறாரே..?’’

‘’வெளிப்படையாகப் பேசுங்கள். நீங்கள் எனக்கு சுகம் அளிக்க மறுத்தால் எல்லை மீறிவிட வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்யுங்கள். நிறைய ஆண்களுக்கு பெண் உடலில் எங்கே இன்பம் ஒளிந்திருக்கிறது என்பதே தெரியவில்லை. தங்கள் ஆசை முடிந்ததும் பெண்ணுக்கும் இன்பம் கிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். எனவே, மன்மதக் கலையை சொல்லிக்கொடுங்கள்.

அவரது ஆசையைத் தூண்டி அதேநேரம், அந்த ஆசையுடன் அவர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் வகையில் முன்விளையாட்டில் ஈடுபடுங்கள். பெண்களுக்கு உச்சகட்டம் என்று இருப்பதை புரியவையுங்கள். அந்த உச்சகட்டம் என்பதும் ஆண்களைப் போன்று ஓய்வு கேட்பதில்லை. அதன் பிறகும் எத்தனை முறை என்றாலும் தாக்குப்பிடிக்கக் கூடியது. இவற்றை எல்லாம் பேசுங்கள். அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றால் மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள்.

ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் ஆண்மை இல்லாதவர் என்பதை வெளியில் சொல்ல வேண்டியிருக்கும் என்று உறுதியுடன் சொல்லுங்கள். வழிக்கு வந்துவிடுவார். ஏனென்றால், ஆண்கள் ஊருக்குத் தான் பயப்படுகிறார்கள். அதேநேரம், தனிமையில் இன்பம் காண கற்றுக்கொள்ளுங்கள். தினமும் பாலியல் தொந்தரவு செய்யாதீர்கள்…’’ என்றார் ஞானகுரு.

புன்னகையுடன் கிளம்பினாள் அந்தப் பெண்.

Leave a Comment