பூங்காவில் தனியாருக்கு அனுமதி மறுப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 183

பூங்காவில் திருக்குறள் பாடல் மற்றும் விளக்கம் கொடுக்கும் வகையில் மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த மாற்றத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. மக்கள் நல்ல விஷயங்களுக்கு மதிப்பும் வரவேற்பும் கொடுக்கிறார்கள் என்பது உறுதியானதால், அடுத்தடுத்து மேலும் சில மேம்பாட்டுப் பணிகளில் அக்கறை செலுத்தினார்.

அந்த வகையில், மாநகரப் பூங்காக்களில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டன. உடல் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் இயற்கை உணவுகள், மனதிற்கு மகிழ்வூட்டும் ஆடல், பாடல் மற்றும் நாட்டுப்புறக் கலைகள், சிந்தனையைத் தூண்டும் இலக்கிய சிந்தனை போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பூங்காவில் வழிவகை செய்யப்பட்டன.

அதாவது பொழுதுபோக்குவதற்கு என்று வருபவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையை மாற்றி, அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் வெறுமனே அரட்டைக் கச்சேரி நடக்கும் இடமாக இல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு தரும் பள்ளியாகவும் சைதையின் காலத்தில் பூங்காக்கள் மாறிப்போயின.

அதேநேரம், பூங்காவில் வணிக நோக்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முழுக்க முழுக்க சேவை நோக்கத்துடனும் தங்கள் திறமையைக் காட்ட விரும்பும் நபர்களுக்கு மட்டுமே பூங்காவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைத்தால், பூங்காவுக்கு வருமானம் கிடைக்கும் என்று கூறப்பட்ட ஆலோசனையை மேயர் சைதை துரைசாமி முழுமையாக நிராகரித்தார். தனியார்களை உள்ளே அனுமதிப்பது பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துவிடும் என்று தடுத்து நிறுத்தினார். அதோடு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால், ‘பூங்காவில் தெருக்கூத்து’  என்ற கலைநிகழ்ச்சியும்  மாநகராட்சி அனுமதியுடன் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள் நிறைய நடைபெற்றதால் பொதுமக்களின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியது. இது, மேயர் சைதை துரைசாமியின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment