கிடுகிடுவென பரவிய டெங்கு காய்ச்சல்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 75

கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மேயர் சைதை துரைசாமி தீவிரம் காட்டிய நேரத்தில், சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவியது. கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலியால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

டெங்கு எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுவதால் இதனை டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள். இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலியும் வேதனையும் தோன்றும். பொதுவாக கருப்பு நிறமும் சிறகுகளில் வெள்ளைப் புள்ளியும் உள்ள ஏடிஸ் எஜிப்தி எனும் கொசுக்களாலே டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.

பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. பொதுவாக, கொசுக்கள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும். ஆனால், டெங்குக் கொசுக்கள் இவற்றிலிருந்து வித்தியாசமாக சுத்தமான நீர்நிலைகளில் வளரக்கூடியவை. இந்த கொசுக்கள் பெரும்பாலும் மாலை அல்லது பகல் நேரத்திலே கடிக்கின்றன.

டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்பட்டு கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் விழி சிவந்து கூசுதல் மற்றும் மூட்டு வலிகளில் அவதிப்பட்டார்கள்.

பெரும்பாலான நபர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் குணமாகத் தொடங்கிவிடும். ஆனால், சிலருக்கு டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உடனடியாக தட்டணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சென்னையில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார் மேயர் சைதை துரைசாமி. அப்போது தான் அந்த அதிர்ச்சிகரமான தகவலை ஆங்கில மருத்துவர்கள் கூறினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.
  •  

Leave a Comment