சிரிச்சிக்கிட்டே இருங்க
மனைவி : என்னங்க நம்மோட 5 வது கல்யாண நாளுக்கு சிங்கப்பூருக்கு கூட்டிட்டுப் போறீங்களா..?
கணவன் : கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன். ஆனா, திரும்பவும் கூட்டிட்டு வர மாட்டேன். சரியா..?
……………..
பெண் : நீங்க என் சிரிப்பை பார்த்து மயங்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். பார்த்துக்கிட்டே இருக்குறீங்க…
ஆண் : நான் ஒரு பல் டாக்டர். உங்க சிரிப்பு கேவலமா இருக்கு, ஆஸ்பத்திரிக்கு வர்றீங்களா..?
……………
தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்…
மகன்: ஃபெயிலாயிட்டா?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
……………….
அவன் : நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?
இவன் : எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
…………………
அவன் : இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!
இவன் : ஒருவேளை பனியனா இருக்குமோ?
………………..
நோயாளி : டாக்டர் ஆபரேசனால் எனக்கு பின்னாடி ஏதாவது பிரச்னை வருமா..?
டாக்டர் : அப்படியெல்லாம் எதிர்காலத்து மேலே நம்பிக்கை வைக்காதீங்க.
………………….
அவன் : அவரோட பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே. இன்னும் அவர் ஏன் மாப்பிள்ளையைத் தேடிகிட்டி இருக்கார்.
இவன் : அட, அவர் பொண்ணை கல்யாணம் முடிச்ச மாப்பிள்ளையைத்தான் காணோமாம்… அவரைத்தான் இப்போ தேடறார்
…………………