சுன்னத் கட்டிங் ஒரு மூட நம்பிக்கை

Image

சிறுவர்களுக்கு நடக்கும் கொடூரம்

இஸ்லாம், யூத மதங்கள் சுன்னத் என்பதை ஒரு சடங்காக சிறுவர்களுக்கு வலியுறுத்துக்கின்றன. மருத்துவ ரீதியில் இது ஆரோக்கியமானது என்ற மக்கள் நம்பிக்கையில் உண்மை இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வோம்.

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் சுன்னத்துக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. எகிப்தியர்கள் கிமு 6000 ஆண்டிலேயே சுன்னத் பண்ணியதாக மம்மிகள் மீது செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. சுன்னத் என்பது ஆண்குறியின் முன்தோலை வெட்டி நீக்கிவிடுவது.

இஸ்லாம் மற்றும் யூத மதம் இரண்டும் சுன்னத் செய்வதை கட்டாயப்படுத்துகின்றன. யூத கலாச்சாரத்தில் இது ஒரு பாரம்பரிய நடைமுறை. பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள யகோவா கடவுளுக்கும் ஆபிரகாமுக்கும் இடையிலான உடன்படிக்கை என்று கருதப்படுகிறது.  

யூத மதத்தில் பிறந்த 8வது நாளில் சுன்னத் செய்யப்படுகிறார்கள். ஏசுநாதர் பிறந்து 8 வது நாளில் சுன்னத் செய்யப்பட்டார் என்றும் வெட்டப்பட்ட தோல் இத்தாலி சர்ச் ஆஃப் கால்கடாவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இஸ்லாமிய கலாச்சாரத்தில், பொதுவாக சிறுவனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது சுன்னத் செய்யப்படுகிறது, இருப்பினும் அந்த விதி முழுமையானது அல்ல. இது குர்ஆனில் எழுதப்படவில்லை என்றாலும் சுன்னாவில் நபிகள் நாயகத்தால் விவரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் என்னவோ தமிழ் முஸ்லிம்கள் சுன்னத் என்று சொல்கிறார்கள். சுன்னத் ஒரு ஆணாக மாறுவதற்கான சடங்கு.

முன்தோலில் தூண்டப்படும் நரம்பு முனைகள் நிறைய இருக்கின்றன. உடலுறவின் போது இயற்கை லூப்ரிகண்டாகச் செயல்படுகிறது. ஒரு குழந்தையிடமிருந்து அதை அகற்றுவது, அவனது அனுமதியின்றி அவனது உணர்திறனைப் பறிப்பதாகும். ஆண்குறியின் தோற்றத்தை அதன் இயற்கையான வடிவத்திலிருந்து மாற்றுவது தேவையில்லாத ஒரு சடங்கு.

சுன்னத் செய்வதன் மூலம் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், எச்.ஐ.வி., ஆண்குறி புற்றுநோய் அபாயம் குறைகிறது என்று காரணம் சொல்கிறார்கள். பாதுகாப்பான உடலுறவு மூலம் எச்.ஐ.வி. தொற்றைத் தடுத்துவிட முடியும். சிறுநீர்த் தொற்று வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், நோய் வந்தாலும் குணப்படுத்த ஆண்டிபயாடிக் மருந்துகளே போதும்

மிகவும் அரிதான ஆண்குறி புற்றுநோய் ஒரு லட்சம் ஆண்களில் ஒருவருக்கு மட்டுமே வருகிறது. அதேநேரம் ஆயிரம் ஆண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை காரணம் காட்டி, ஆண்களுக்கு யாரும் முலைக்காம்பை வெட்டி எறிவதில்லை.

மிகவும் சிறியவர்களாக இருக்கும்போதே சுன்னத் செய்யப்படுவதால், அந்த காலகட்டத்தில் உருவான வலி, வேதனை போன்றவை வளர்ந்த பிறகு பெரியவர்களுக்கு நினைவு இருக்காது. எனவே சுன்னத் செய்வதால் எந்த பிரச்னையும் இல்லை என்ற கூட்ட மனப்பான்மையில் இருந்து வெளிவர முடியாத அழுத்தம் பெரியவர்களிடம் இருக்கிறது. அதனால் குழந்தைக்கு தடுப்பூசி அல்லது நகம் வெட்டுவது போன்று இதனையும் அத்தியாவசியமாகக் கருதுகிறார்கள்.

மனிதனின் உடல், இறைவனால் உருவானது, அதுவே பூரணமானது என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியென்றால் சுன்னத் என்பது மனிதனின் இயற்கையான நிலையை அதன் சரியான வடிவத்திலிருந்து மாற்றுவது என்பது ஒரு பாவம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வகையில் ஆரோக்கியமான குழந்தைக்கு சுன்னத் செய்வதற்கு எந்த அவசியமும் இல்லை. இதற்கு எந்த மருத்துவ மதிப்பும் இல்லை

சுன்னத் என்பது இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதி அல்ல, அது முஸ்லிம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனவே, முஸ்லிம்கள் சுன்னத் செய்யாமல் தங்கள் மதத்தைப் பின்பற்றலாம், இருப்பினும் அவர்கள் தங்கள் சமூகத்தில் இருந்து பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்பதாலே இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்கிறார்கள். நாகரிகத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்கள் சுன்னத் செய்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவது பாலிய

இஸ்லாமியர்களைத் தவிர வேற்று மதத்தவர்கள் அதிகமாக சுன்னத் செய்யும் நாடு அமெரிக்கா. பாலியல் ஈடுபாடு அதிகரிக்கும், பாலியல் நோயில் இருந்து காப்பாற்றும், பெண்களுக்குப் பிடிக்கும் என்ற எண்ணத்திலே அவர்கள் சுன்னத் செய்துகொள்கிறார்கள். அங்கு சிறுவர்களாக இருக்கும்போது சுன்னத் செய்வதில்லை. 24 முதல் 59 வயதுடைய ஆண்களில் சுமார் 80% பேர் சுன்னத் செய்துகொள்கிறார்கள். அவர்கள் உடல் அவர்கள் விருப்பம் என்றாலும் விஞ்ஞான முன்னேற்றத்தில் இருக்கும் நாட்டில் இதனை அதிகமானவர்கள் செய்துகொள்கிறார்கள் என்பது முரண் நகை.

பெண்களுக்கு பிறப்புறுப்பின் கந்து முனையை வெட்டியெடுப்பது கொடூரம் என்று உலகமே இப்போது ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சுன்னத் என்பதும் அதற்கு இணையான கொடூரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

.- ஜி.சீனிவாசன்

Leave a Comment