என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 114
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு கேன்டீன் இயங்கிவந்தாலும், ஊழியர்கள் வெளியே சென்று சாப்பிடுவது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரிய வந்தது. இதற்கான காரணம் கேட்டபோது, மாநகராட்சியின் கூட்டுறவு சங்கம் நடத்திவரும் உணவகத்தில் சுவையாக எதுவும் கிடைப்பதில்லை என்று சொல்லப்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றால், அவர்களுடைய வேலை நேரம் குறைந்துவிடும் என்பதுடன் சேவை கிடைக்காமல் மக்களும் காத்திருக்கும் சூழல் ஏற்படும். எனவே, இதற்கு ஒரு நல்ல தீர்வு காண விரும்பினார் மேயர் சைதை துரைசாமி.

அதிகாரிகளிடம் ஆலோசனை செய்வது சரியாக இருக்காது என்பதால், மேயர் சைதை துரைசாமி அந்த உணவகத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார். 30 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், மோட்டல்களில் கொடுக்கப்படுவது போன்று மிகவும் மோசமான தரத்தில் இருந்தது. அதோடு, அந்த கேன்டீன் சரிவரப் பராமரிக்கப்படாத காரணத்தால் முகம் சுளிக்கச் செய்யும் அளவுக்கு சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிவந்தது.
‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று மேஜையிலும் அலுவலகத்திலும் எழுதி வைத்திருக்கும் நிலையில், மாநகராட்சி கேன்டீன் இத்தனை மோசமான நிலையில் செயல்படுவதைக் கண்டு சைதை துரைசாமி அதிர்ந்தே போனார். இங்கு கோரிக்கை மனுவுடன் வரும் பொதுமக்கள் இந்த கேன்டீனைப் பார்த்தாலே, மாநகராட்சி நிர்வாகம் சரியாக நடக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்பது புரிந்தது. எனவே, முதல் வேலையாக அந்த உணவகத்தை இழுத்து மூடி பூட்டுப் போட்டார். இதனை மூலிகை உணவகமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கினார்.
- நாளை பார்க்கலாம்.