மீன் வளத்துறை அமைச்சகத்துடன் மோதல்..?

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 191

சென்னையில் பொழுதுபோக்குவதற்கு நிறையவே இடங்கள் உள்ளன. ஆனால், ஜாலியாக ஒரு படகுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னைவாசிகள் ஆசைப்பட்டால், அதற்காக நகருக்கு வெளியே முட்டுக்காடு வரைக்கும் போகவேண்டும். அந்த நிலையை மாற்றி, சென்னை நகருக்கு உள்ளேயே படகுப்பயணம் செய்யமுடியும் என்ற வகையில் சேத்துப்பட்டு பசுமைப் பூங்கா உருவாகக் காரணமாக இருந்தவர் மேயர் சைதை துரைசாமி.

சென்னை நகருக்கு நடுவில், சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பின்புறம் மீன்வளத் துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் ஏரி கேட்பாரற்று கிடந்தது. ஒரு பெருமழையில், சேத்துப்பட்டு ஏரி நிரம்பி பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும், கே.எம்.சி. மருத்துவமனைக்குள்ளும் நுழைந்திருப்பதைக் கண்டு விசாரணை நடத்தினார். அப்போது அதிகாரிகள், ‘’மழை நேரங்களில் எல்லாம் இப்படி நடப்பதால், கே.எம்.சி. மருத்துவமனை பெரும்பாலான நேரம் சேறும்  சகதியுமாகவும் தான் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்கள்.

இதனை எப்படி சீர்செய்வது என்று யோசனை செய்தார் மேயர் சைதை துரைசாமி. உடனே அதிகாரிகள், ‘’அந்த இடம் நமது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் நாம் கவனம் செலுத்த வேண்டாம்’’ என்று ஆலோசனை சொன்னார்கள்.

அவர்களிடம் சைதை துரைசாமி, ‘’இதனால் சென்னை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், அதற்கான பொறுப்பை நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். நமது ஆட்சி நடக்கும்போது இப்படி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி ஒதுங்கிக்கொண்டால் மக்களுக்கு எப்பட் நன்மை செய்ய முடியும். மீன் வளத்துறை அமைச்சரிடம் நான் பேசுகிறேன்’’ என்றார் சைதை துரைசாமி.

தேவை இல்லாமல் மீன் வளத்துறை அமைச்சருடன் மோதுகிறார் மேயர் சைதை துரைசாமி என்றே அதிகாரிகள் கருதினார்கள். என்ன நடந்தது தெரியுமா?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment