சென்னையில் காங்கிரீட் சாலைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 235

பொதுவாக சாலை அமைப்பு என்றாலே தார்ச்சாலை என்பதே அனைவருடைய கருத்தாக இருக்கும். ஆனால், மேயர் சைதை துரைசாமி மட்டுமே பெருநகர சென்னையில் காங்கிரீட் சாலைகள் அமைப்பதற்குத் திட்டமிட்டார். இதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தார்ச்சாலை என்றால் அடிக்கடி போடவேண்டிய சூழல் உருவாகும் என்பதாலும், அது ஆதாயம் தரும் என்பதே அனைவருடைய கணக்காகவும் இருந்தது.  ஆனால், காங்கிரீட் சாலைகளே மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று அனைவருக்குமே பாடமே எடுத்தார்.

தார்ச் சாலைகளை விட காங்கிரீட் சாலை அமைப்பதற்கு ஆரம்ப செலவுகள் அதிகம் என்றாலும் நீடித்த பயன்பாடு கொண்டது. சிசி சாலைகள் எனப்படும் சிமெண்ட் காங்கிரீட் சாலைகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டவை என்பதுடன் சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும். வானிலை மாற்றங்களான வெயில், மழை, வெள்ளம் போன்றவைகள் மூலம் காங்கிரீட் சாலைகள் எளிதில் சேதம் அடைவதில்லை. அப்படியே சேதமடைந்தாலும் எளிதில் பராமரிப்பு செய்துவிட முடியும்.

மென்மையான சமமான மேற்பரப்பு கொண்டவை என்பதால் வாகனங்கள் வேகமாக செல்வதற்கும் டயர்களின் தேய்மானம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. கனரக வாகனங்கள், அதிக போக்குவரத்து போன்ற பிரச்னைகளை காங்கிரீட் சாலைகள் நன்கு தாக்குப்பிடிக்கக் கூடியவை. அடிக்கடி சாலைகள் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதில்லை என்பதால் பொருளாதார ரீதியிலும் நன்மை தரக்கூடியது.

எனவே, நீண்ட நாட்கள் உழைக்கும் வகையில் காங்கிரீட் சாலைகள் சென்னையில் முழுவதும் அமைக்கவேண்டும் என்று சைதை துரைசாமி திட்டமிட்டார். குறிப்பாக 448 பேருந்து சாலைகளும் காங்கிரீட் சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். அதுமட்டுமின்றி 21 அடிக்கு மேல் அகலமுள்ள அத்தனை சாலைகளையும் காங்கிரீட் சாலைகளாக மாற்றுவதற்கு ஆலோசனை தெரிவித்தார். மேயர் சைதை துரைசாமியின் விருப்பம் நிறைவேறியதா..?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment