என்ன செய்தார் சைதை துரைசாமி – 310
மாநகராட்சி சார்பில் குப்பை அகற்றப்படுவதற்கு முன்பும் பின்பும் புகைப்பட ஆதாரத்தை துப்புரவு ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட நடவடிக்கைக்கு மக்களிடம் இருந்து மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏனென்றால், இதன் மூலம் அறைகுறையாக குப்பை அகற்றிவிட்டுச் செல்லும் அலட்சிய நடவடிக்கை முழுமையாகக் குறைந்துபோனது.
புகைப்படத்தில் குப்பைகள் அக்கம்பக்கம் இருப்பது தெரிந்தால் அதற்கும் கேள்வி கேட்கப்பட்டு, முழுமையாக அகற்றுவதற்கு உத்தரவு போடப்பட்டது. மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த இந்த புகைப்பட ஆதாரம் காரணமாக குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டது மட்டுமின்றி, எங்கு எவ்வளவு நேரம் வேலை செய்திருக்கிறார்கள் என்பதும் புகைப்பட ஆதாரம் மூலம் தெரியவந்தது. அதனால் பணியாளர்கள் முழு நேரமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குப்பை 100 சதவிகிதம் அள்ளப்படுவதை சாத்தியமாக்கியவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான்.
எந்த ஊழியர் எந்த இடத்தில் பணியாற்றினார், எவ்வளவு நேரத்தில் குப்பை அள்ளப்பட்டது. அடுத்து அவர் எங்கே பணி செய்தார் என்பதை எல்லாம் போட்டோக்கள் மூலம் ஆய்வு செய்து அவர்களுடைய பணி கண்காணிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் துப்புரவு பணியாளர்களின் வருகையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. எங்காவது குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அங்கு பணியாளர் வருகை தரவில்லை என்று சாக்கு சொல்லி பிரச்னையைத் தள்ளிப் போட்டார்கள். இந்த வருகைப் பதிவேட்டில் ஏதோ குழப்பம் நிகழ்கிறது என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தத். இதை தடுப்பதற்கு என்ன செய்தார் தெரியுமா..?
- நாளை பார்க்கலாம்.