என்ன செய்தார் சைதை துரைசாமி – 377
மேயர் சைதை துரைசாமி பெருநகர சென்னையின் வளர்ச்சிக்கு உதவும் என்பதாலும் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முடியும் என்பதாலும் சீனப் பயணத்துக்கு ஆர்வத்துடன் காத்திருந்தார். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 2015ம் ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மற்றும் மேயர்கள் அடங்கிய அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமிக்கு அழைப்பு வந்தது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் சி ஜின்பின் ஆகியோர் முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைத்ததில் மேயர் சைதை துரைசாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி கலந்துகொள்வதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அனுமதி வழங்கிவிட்டார். ஆனால், மேயர் சைதை துரைசாமியின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒருசிலர், இந்த பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு முயற்சி செய்தார்கள். அதிகாரிகளையும் அவர்கள் ஆட்டிப்படைத்தார்கள்.
எனவே, சீனப்பயணம் மேற்கொள்வதற்கான அரசு ஆணை கிடைக்காமல் காலம் தாழ்த்துவதற்கு சில வேலைகளைச் செய்தார்கள். எனவே, சீனாவுக்கு மேயர் சைதை துரைசாமி கிளம்ப வேண்டிய 13.05.2015 அன்று மாலை 6:30 மணி அளவில் தான் தமிழக அரசின் ஆணை கிடைத்தது. மேயர் சைதை துரைசாமியின் உதவியாளருக்கான அரசாணை மாலை 7:30 மணிக்கே கிடைத்தது.
இத்தனை தாமதமாக அரசாணை கிடைத்தால் மேயர் சைதை துரைசாமியால் அவசரம் அவசரமாக கிளம்ப முடியாது என்றே இந்த நெருக்கடி கொடுத்தனர். கிளம்புவதற்கு குறுகிய் நேரம் என்றாலும் மேயர் சைதை துரைசாமி கொஞ்சமும் மனம் தளரவில்லை. நிச்சயம் சீனாவுக்குப் போய்விட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஏனென்றால், இந்த நேரத்தில் மனிதநேயத்தில் படித்த ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற பதவிகளில் இருந்த மாணவர்கள் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் குறுகிய காலத்தில் பெற்றுத்தருவதற்குத் தயாராக இருந்தார்கள்.
தன்னுடைய மாணவர்கள் எவரிடமும் மேயர் சைதை துரைசாமி எந்த உதவியும் ஒருபோதும் கேட்பதில்லை. ஆனால், மேயர் சைதை துரைசாமிக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பது தெரியவந்ததும் அடுத்தடுத்து பல மாணவர்கள் அவர்களாகவே முன்வந்து உதவி செய்தார்கள். அவர்கள் கொடுத்த உறுதி காரணமாகவே மேயர் சைதை துரைசாமி எவ்வித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக இருந்தார்.
அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போயஸ் தோட்டத்திற்குச் சென்று புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதோடு, முக்கிய அமைச்சர்களையும், தலைமைச் செயலக அதிகாரிகளையும் சந்தித்தார். அதன் பிறகு இரவு 9 மணிக்கு டெல்லி செல்லும் விமானம் ஏறினார் மேயர் சைதை துரைசாமி.
கடும் நெருக்கடி கொடுத்தால் இந்த பயணத்தை மேயர் சைதை துரைசாமி மேற்கொள்ள மாட்டார் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சிக்கல் உருவாக்கி, சிதைத்துக்கொண்டிருந்த எதிரிகள் ஆச்சர்யப்படும் வகையில் பயணத்தைத் தொடங்கினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.