கார்ட்டூன் என்பது குழந்தைகளுக்குப் போதை

Image

உஷாரா இருங்க

டோரா, புஜ்ஜி, டோரேமான், சின் சான், மோட்டு பட்லு, சோட்டா பீம், பொம்மி, கேப்டன் அண்டர்பேன்ட்ஸ், சூப்பர் ராபிட்ன்னு ஏதாச்சும் ஒரு கார்ட்டூன் போட்டா போதும், என் பிள்ளை சமர்த்தா சாப்பிடும் என்று நிறைய பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் எல்லாமே குட்டிக் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்படுபவை என்பதால், இவற்றைப் பார்ப்பதில் தவறில்லை என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். 

ஆனால் மனநல மருத்துவர்கள் கார்ட்டூன் பற்றி தெரிவிக்கும் கருத்து மிகவும் அச்சமூட்டுகிறது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குறிப்பாக 8 வயதைத் தொடாத பிள்ளைகளுக்கு  கார்ட்டூன்க ரொம்பவே ஆபத்தான உலகம்’ என்கிறார்கள். ஏனென்றால், நிஜ உலகத்திற்கும் கார்ட்டூன் உலகத்திற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது. கார்ட்டூன் அதிகம் பார்க்கும் குழந்தைகளுக்கு நிஜ உலகம் பிடிக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.  

கார்ட்டூன் உலகத்தில் சில நொடிகளில் சின் சான் கைக்கு பீட்சா வந்துவிடும், ஒரு பாட்டில் குளிர் பானம் குடித்துவிடுவான். ஆனால், நிஜத்தில் அது நடக்காது. நிஜ அம்மா, அப்பாவை விட கார்ட்டூன் அம்மாவும் அப்பாவும் கேட்டதெல்லாம் கொடுக்கும் நல்லவர்களாகத் தெரிவார்கள். இதனால் பெற்றோருடன் பேசுவதைக் குறைப்பதற்கும் நிஜ உலகை வெறுக்கவும் வாய்ப்பு உண்டாகலாம். ஆகவே, நிஜ உலகம், பள்ளிக்கூடம், சக தோழர்கள் அறிமுகமாகும் வரை குழந்தைகளுக்கு கார்ட்டூன் காட்டுவதைத் தள்ளிப் போடுங்கள்.

எட்டு வயது வரையிலும் குழந்தைகளின் மூளையின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய பேசுவதற்கும், விளையாடுவதற்கும், கற்றுக்கொள்வதற்கும் ஊக்கம் கொடுப்பதே நல்லது. திரையில் பார்ப்பது பொய்யான உலகம் என்பதை குழந்தை அறிந்துகொண்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்யுங்கள்’’ என்கிறார்கள்.

குழந்தைகள் குழந்தைகளாகவே வளரட்டும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். தொடர்புக்கு ; 9840903586

Leave a Comment