• Home
  • அரசியல்
  • ஐஸ்வர்யா ராயை மறக்கலாமா ’பப்பு’ ராகுல்..?

ஐஸ்வர்யா ராயை மறக்கலாமா ’பப்பு’ ராகுல்..?

Image

பா.ஜ.க. கிண்டல் அட்டாக்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிவரும் கருத்து பா.ஜ.க.வினருக்கு கடும் எரிச்சல் கொடுத்திருக்கும் நிலையில், மிஸ் இந்தியா பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்று ராகுல் காந்தி கூறியிருப்பது கடும் சர்ச்சையாகியிருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் பேசும்போது, ‘’மிஸ் இந்தியா’ அழகி பட்டம் வென்றவர்களின் பட்டியலில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உள்ளார்களா என்று தேடிப் பார்த்தேன். ஆனால் அந்த பட்டியலில் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஐஸ்வர்யா ராய் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாதா..? மேலும் இதில் எல்லாம் இட ஒதுக்கீடு தரவேண்டுமா பப்பு ராகுல் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

.இதை விட தரக்குறைவான, முட்டாள்தனமான, வன்மமான கருத்து இருக்க முடியாது. இந்த நாட்டை ஜாதி ரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கும் இழிசெயல் இந்த நபரின் முயற்சி. 15 வருடங்கள் தன் குடும்பம் ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதால் ஏற்பட்ட விரக்தியில் சமுதாயத்தை சீர்கெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக, ஜாதி வெறியை தூண்டி விட்டு தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த நபர் சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.ஜாதி ரீதியாக, மத ரீதியாக இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக துடைத்தெறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ராகுல் மீது காட்டமாக விமர்சிக்கிறார்கள்.

எல்லை மீறிப் போகிறார் ராகுல்.

Leave a Comment